ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மூன்று மாதங்களுக்குள், படப்பிடிப்பு அனைத்தையும் முடித்து விடுங்கள் என, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம், நடிகை சமந்தா கூறியுள்ளார். சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும், அக்., 6ல், திருமணம் நடக்க உள்ளது. சமந்தா, தற்போது விஜயுடன், அட்லி இயக்கத்தில் நடித்து வரும் படம், இறுதி கட்டத்தில் உள்ளது. மேலும், இரும்புத்திரை, அநீதி கதைகள் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயனுடன் சமந்தா நடிக்கும் படம், 18ல் துவங்குகிறது. அக்., மாதம் திருமணம் நடப்பது உறுதியாகி உள்ளதால், அனைத்து படங்களையும், செப்டம்பருக்குள் முடிக்க வேண்டும் என, இயக்குனர்களிடம், சமந்தா கோரிக்கை விடுத்துள்ளார். திருமணத்திற்கு பின், வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ள சமந்தா, இரண்டு மாதம் கழித்தே, இந்தியா திரும்புகிறார். திருமணத்திற்கு பின், ஜோதிகா பாணியில் படங்களை தேர்வு செய்து நடிக்க, சமந்தா திட்டமிட்டு உள்ளார்.