டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வருவது புதிதொன்றும் அல்ல... கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை ஏகப்பட்ட திரைபிரபலங்கள் அரசியலில் இணைந்துள்ளனர். அந்தவகையில் இப்போது இளம் இயக்குநர் ஒருவர் பா.ஜ.,வில் இணைந்துள்ளார். ஜித்தன்-2, 1.A.M., கிரிங் கிரிங்... போன்ற படங்களை இயக்கிய ராகுல், இன்று(ஜூன் 13-ம் தேதி) முறைப்படி தன்னை பா.ஜ.வில் இணைத்து கொண்டார். தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை முன்னிலையில், தன்னை பா.ஜ.வில் இணைத்து கொண்டார். ராகுலுக்கு, பா.ஜ.,வில் இணைந்ததற்கான உறுப்பினர் அட்டையை வழங்கினார்.
பா.ஜ.,வில் இணைந்தது குறித்து ராகுல் கூறியதாவது... "பா.ஜ.,வின் கொள்கை எனக்கு பிடித்திருந்தது. கறுப்பு பணத்தை ஒழிக்க ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டது முதல் இப்போது மாட்டிறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது வரை... அவர்கள் எடுத்த ஒவ்வொரு முயற்சியும் என்னை ஈர்த்தது. நாம் சார்ந்த இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன், அதற்கு அரசியல் தான் சரியாக வரும் என்பதால் பா.ஜ.வில் இணைந்தேன்" என்றார்.