இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
தமிழில் காவியத்தலைவன் இசைவெளியீட்டு விழா நடைபெற்ற சமயத்தில் தான் பிருத்விராஜுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு அலங்ரிதா மேனன் என பெயர் வைத்துள்ளனர் பிருத்விராஜ் - சுப்ரியா தம்பதியினர். தற்போது அலங்ரிதாவுக்கு மூன்று வயதான நிலையில் அவரை பள்ளிக்கு அனுப்பும் வேலைகளை சில மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டார் பிருத்விராஜ். நேற்று பள்ளிக்கு தனது குழந்தையை அழைத்துச்சென்று விட்டுவிட்டும் வந்துள்ளார்..
வந்த கையுடன் இன்று தனது குழந்தையை பள்ளிக்கு அனுப்பிய அனுபவத்தை தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார் பிருத்விராஜ். சின்னக்குழந்தையை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வருவதற்குள் எனக்கு ஏன் இவ்வளவு நடுக்கம்... தவிப்பு... சினிமாவில் இதுபோன்ற காட்சிகளில் பலமுறை வெளுத்து வாங்கியுள்ளேன். ஆனால் நிஜத்தில் ஒரு தந்தையாக குழந்தையை முதன்முதலாக பள்ளிக்கு அனுபவம் இருக்கிறதே.. அப்பப்பா..” என பரவச உணர்வுடன் குறிப்பிட்டுள்ளார் பிருத்விராஜ்.