ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஆரம்ப காலத்தில் குறும்படங்களில் நடித்து வந்த பாபிசிம்ஹா, பின்னர் பல படங்களில் வில்லனாக நடித்தார். பிறகு ஹீரோவாக பல படங்களில் நடித்தார். பாபி சிம்ஹா, ஹீரோவாக நடித்து வெளியான படங்கள் வெற்றிப் படங்களாக அமையவில்லை. எனவே விநியோகஸ்தர்கள் தியேட்டர்காரர்கள் மத்தியில் பாபிசிம்ஹா ஆதரவை இழந்துவிட்டார்.
இதை புரிந்துகொண்ட அவர், நமக்கு ஹீரோ வேடம் தாங்காது என்பதை உணர்ந்துவிட்டார். தற்போது 'திருட்டுப் பயலே-2', 'வல்லவனுக்கும் வல்லவன்' ஆகிய இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்து முடித்துவிட்டார். இவற்றில் வல்லவனுக்கு வல்லவன், பாபி சிம்ஹாவின் சொந்தப்படம்.
இந்தநிலையில், மீண்டும் வில்லன் அவதாரம் எடுக்க இருக்கும் பாபி சிம்ஹாவுக்கு விஜய்சேதுபதி நடிக்கும் கருப்பன் படத்தில் வில்லன் வேடம் கிடைத்தது. அடுத்து, விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கும் 'சாமி-2' படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் பாபி சிம்ஹா.
'சாமி-2'வில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்ட பாபி சிம்ஹா அதிக சம்பளம் கேட்டதாகவும், அதற்கு ஒப்புக்கொள்ளாத ஹரி வேறு வில்லனை தேடுவதாகவும் ஒரு தகவல் அடிபடுகிறது.