கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் நடிக்க ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 'எந்திரன்' படம் ரோபோக்களைப் பற்றிய படம். அதாவது எந்திர மனிதன் என அழைக்கப்படும் ரோபோ கதாபாத்திரம் தான் படத்தின் கதாநாயகன். அந்த ரோபோவாகவே ரஜினிகாந்த் நடித்தார். அதிலும் கிளைமாக்சுக்கு முன்னதாக பல ரோபோக்களாகவும் வந்து படம் பார்த்த ரசிகர்களை அசத்தினார்.
அந்த 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் '2.0' படத்தில் 3 முக்கிய ரோபோ கதாபாத்திரங்கள் இடம் பெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் '2.0' படத்தின் இரண்டு புகைப்படங்கள் 'லீக்' ஆகின. அதில் ரோபோ உடையில் ரஜினிகாந்தும், எமி ஜாக்சனும் இருந்தனர். முன்பு டில்லியில் படப்பிடிப்பு நடந்த போது படத்தின் வில்லன் அக்ஷய் குமாரும் ரோபோ தோற்றத்தில் இருந்த புகைப்படம் 'லீக்' ஆனது.
அதனால் படத்தில் நாயகன், நாயகி, வில்லன் என மூவருமே ரோபோக்கள்தான், அவர்களுக்குள் நடக்கும் போட்டிதான் '2.0' படத்தின் கதை என சமூக வலைத்தளங்களில் ஒரு விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது.