'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமுத்திரகனியின் தொண்டன் படத்தில் அவரது தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார் அர்த்தனா. ஆனால் அர்த்தனா முதன் முதலில் நடிக்க ஒப்பந்தமானது ஜி.பி.பிரகாஷ் நடித்துள்ள செம படத்திற்குத்தான். வெண்ணிலா கபடி குழு படத்தின் இரண்டாம் பாகத்திற்கு நடிகை தேடினார்கள். முதல் பாகத்தில் நடித்த சரண்யா மோகன் திருமணமாகி செட்டிலாகிவிட்டதால் அவரைப்போன்ற துறுதுறுப்பான நடிகை தேடியதில் சுசீந்திரனுக்கு கிடைத்தவர் அர்த்தனா. மூன்றாவதாக ஒப்பந்தமான படம்தான் தொண்டன். இரண்டு படங்களில் ஹீரோயினாக நடித்துக் கொண்டே தான் மூன்றாவது படத்தில் தங்கையாக நடித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
முதல் படத்தில் தங்கையாக அறிமுகமாகிவிட்டீர்களே என்று எல்லோரும் வருத்தமாக கேட்கிறார்கள். தங்கையாக நடிக்கிறது அவ்வளவு பெரிய தப்பா. சமுத்திரக்கனி சார் இயக்கம், நடிப்பு என்றதும் கதையே கேட்காமல் ஒப்புக் கொண்டேன். படப்பிடிப்புக்கு இரண்டு நாள் முன்னாடி போன் பண்ணி என் கேரக்டர் பற்றி ஒரு வரியில் சொல்லுங்க நான் ரெடியா வர்றேன். என்றேன் "என் தங்கை, நல்ல மங்கை" என்று மட்டும் சொன்னார். துணிந்து நடித்தேன். என் நிஜ வாழ்க்கையில் செய்ய முடியாததை அவரது தங்கை கேரக்டர் மூலம் செய்ததில் எனக்கு மகிழ்ச்சி. அடுத்து இரண்டு படங்களில் ஹீரோயினாக நடிக்கிறேன். ஆனாலும் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிக்க மாட்டேன். நல்ல கதை, நல்ல கேரக்டர் கிடைத்தால் எந்த கேரக்டரிலும் நடிப்பேன் என்கிறார் அர்த்தனா.