ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
சமுத்திரகனியின் தொண்டன் படத்தில் அவரது தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார் அர்த்தனா. ஆனால் அர்த்தனா முதன் முதலில் நடிக்க ஒப்பந்தமானது ஜி.பி.பிரகாஷ் நடித்துள்ள செம படத்திற்குத்தான். வெண்ணிலா கபடி குழு படத்தின் இரண்டாம் பாகத்திற்கு நடிகை தேடினார்கள். முதல் பாகத்தில் நடித்த சரண்யா மோகன் திருமணமாகி செட்டிலாகிவிட்டதால் அவரைப்போன்ற துறுதுறுப்பான நடிகை தேடியதில் சுசீந்திரனுக்கு கிடைத்தவர் அர்த்தனா. மூன்றாவதாக ஒப்பந்தமான படம்தான் தொண்டன். இரண்டு படங்களில் ஹீரோயினாக நடித்துக் கொண்டே தான் மூன்றாவது படத்தில் தங்கையாக நடித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
முதல் படத்தில் தங்கையாக அறிமுகமாகிவிட்டீர்களே என்று எல்லோரும் வருத்தமாக கேட்கிறார்கள். தங்கையாக நடிக்கிறது அவ்வளவு பெரிய தப்பா. சமுத்திரக்கனி சார் இயக்கம், நடிப்பு என்றதும் கதையே கேட்காமல் ஒப்புக் கொண்டேன். படப்பிடிப்புக்கு இரண்டு நாள் முன்னாடி போன் பண்ணி என் கேரக்டர் பற்றி ஒரு வரியில் சொல்லுங்க நான் ரெடியா வர்றேன். என்றேன் "என் தங்கை, நல்ல மங்கை" என்று மட்டும் சொன்னார். துணிந்து நடித்தேன். என் நிஜ வாழ்க்கையில் செய்ய முடியாததை அவரது தங்கை கேரக்டர் மூலம் செய்ததில் எனக்கு மகிழ்ச்சி. அடுத்து இரண்டு படங்களில் ஹீரோயினாக நடிக்கிறேன். ஆனாலும் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிக்க மாட்டேன். நல்ல கதை, நல்ல கேரக்டர் கிடைத்தால் எந்த கேரக்டரிலும் நடிப்பேன் என்கிறார் அர்த்தனா.