கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
சந்தானம் தற்போது நடித்து வரும் படம் சர்வர் சுந்தரம். வைபவி சந்தியா ஹீரோயின். பிஜேஸ், கிட்டி, மயில்சாமி, ஷண்முகராஜன், ராதரவி உள்பட பலர் நடிக்கிறார்கள். ஆனந்த் பால்கி இயக்குகிறார். தற்போது அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த படத்திற்காக 15 சமையல் கலைஞர்கள் பணியாற்றி உள்ளனர். இதுகுறித்து ஆனந்த் பால்கி கூறியதாவது:
நாகேஷ் சார் நடித்த சர்வர் சுந்தரம் முதல் கலகலப்பு வரை ஓட்டல் மற்றும் உணவை மையமாக வைத்து பல படங்கள் வந்திருக்கிறது. ஆனால் அவை உணவு பொருளை விட காதலை அதிகமாக பேசியிருக்கிறது. ஆனால் சர்வர் சுந்தரம் முழுக்க முழுக்க உனவு பொருளை மையமாக கொண்டது. அதனூடே சின்னதாக ஒரு காதலும் இருக்கும். நம் வாழ்க்கையின் முக்கியமான அங்கம் உணவு. ஆனால் அதற்கு நாம் பெரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதுதான் சுவை என்று எதையோ முடிவு செய்து எதையோ சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உணவின் மகத்தும் பலருக்கு தெரிவதில்லை.
உணவு பற்றிய படம் என்பதால் வெறும் பிளாஷ்டிக் பொருளால் செய்த காய்கறிகள், உணவு பொருளை பயன்படுத்தவில்லை. நிஜமான பொருட்களை பயன்படுத்தி நிஜமான சமையற் கலைஞர்களை கொண்டு அதனை உருவாக்கி பயன்படுத்தினோம். பிரபல சமையற் கலைஞர் வெங்கடேஷ் பட் தலைமையில் 15 சமையல் நிபுணர்கள் படத்தில் பணியாற்றினார்கள். நடிக்கவும் செய்திருக்கிறார்கள். எந்த காட்சிக்கு எந்த உணவு தேவையோ அதை அங்கேயே உருவாக்கி காட்சியை எடுத்து விட்டு சுடச்சுட நாங்களும் அதை சாப்பிட்டு விடுவோம்.
ஒரு உணவை தயார்செய்து அதனை 15 நிமிடத்துக்குள் படம் எடுத்து விட வேண்டும் இல்லாவிட்டால் அதன் நிறம் மாறிவிடும். ஒரு மணி நேரத்துக்குள் சாப்பிட்டு விட வேண்டும் இல்லா விட்டால் சுவை மாறிவிடும். இதனால் திட்டமிட்டு உணவு பொருட்கள் வீணாகாமல் பார்த்துக் கொண்டோம். உணவை பற்றிய பாடல் ஒன்றை விவேக் எழுதியுள்ளார். என்கிறார் ஆனந்த் பால்கி.