'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகை வரலட்சுமி சரத்குமார், பெண்களை பாதுகாக்கும் பொருட்டு சேவ் சக்தி என்று அமைப்பை சில மாதங்களுக்கு முன்னர் துவக்கினார். பெண்களின் உரிமைக்காக குரல்கொடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று வரலட்சுமி கூறியிருந்தார். மேலும் இதுதொடர்பாக சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் கையெழுத்து இயக்கம் ஒன்றையும் நடத்தி, அதுகுறித்து மாநில அரசுக்கு ஒரு மனு கொடுக்கப்போவதாகவும் முன்பு தெரிவித்திருந்தார் வரலட்சுமி. அதன்படி, நடிகை வரலட்சுமி, தமிழக முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வரலட்சுமி... "பெண்கள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். மாவட்டம் தோறும் பெண்களுக்கான மகிளா கோர்ட் அமைக்க வேண்டும், பெண்கள் பாதிக்கப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகளுக்கு 6 மாத காலத்திற்குள் தண்டனை அளிக்கப்பட வேண்டும்" என்று முதல்வரிடம் வலியுறுத்தியதாக கூறினார்.