Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

“சம்பளம் தரவில்லை” : தேசிய விருதுபெற்ற சிறுவன் குற்றச்சாட்டு..!

12 ஜூன், 2017 - 15:38 IST
எழுத்தின் அளவு:
Child-artist-Gourav-Menon-breaks-down-at-press-meet

மலையாள சினிமாவில் கவனிக்கத்தக்க குழந்தை நட்சத்திரமாக நடித்து வருபவர் சிறுவன் கௌரவ்.. 'பிலிப்ஸ் அன்ட் தி மங்கி பென்' படத்தில் தனது சுட்டித்தனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த இவர் 2015ல் வெளியான 'பென்' படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதையும், மாநில அரசு விருதையும் பெற்றவர். தற்போது 'கொலு மிட்டாய்' என்கிற படத்தில் நடித்து முடித்துள்ள கௌரவ், இந்தப்படத்தில் நடித்ததற்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் தராமல் தன்னை ஏமாற்றி விட்டார்கள் என தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அருண் விஸ்வன் ஆகியோர் மீது குற்றச்சாட்டை தொடுத்துள்ளார்.


மேலும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து அதில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து கூறியுள்ளது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் தன்னை சம்பளம் இல்லாமல் படத்தில் நடிக்க வைத்ததுடன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் தன்னை ஏமாற்றி கலந்துகொள்ள வைத்ததையும் கூறியுள்ளார் கௌரவ். ஆனால் படத்தின் இயக்குனர் அருண் விஸ்வனோ, தாங்கள் ஒப்பந்தம் போட்டபோதே இதில் நடிப்பதற்கென சம்பளம் என்று எதுவும் கிடையாது எனவும், படம் வெளியாகி நன்றாக ஓடினாலோ அல்லது சாட்டிலைட் ரைட்ஸ் நல்லவிலைக்கு போனாலோ நடித்தவர்களுக்கு அதில் குறிப்பிட்ட தொகையை அளிப்பதாகவும் பேச்சு மூலமாக குறிப்பிடிருந்ததாகவும் கூறியுள்ளார். கௌரவ் மட்டுமல்ல படத்தில் நடித்த மற்ற 60 சிறுவர்களும் சம்பளம் ஏதும் வாங்காமல் தான் நடித்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.


மேலும் அவர் கூறுகையில், இந்தப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் 1.88 கோடிக்கு விற்றுள்ளது என்று யாரோ சிலர் தவறாக தகவல் பரப்பியதை வைத்துக்கொண்டுதான் கௌரவ் தங்கள் மேல் இப்படி ஒரு பழி சுமத்தியுள்ளதாகவும் அப்படி இதுவரை எந்த சேனலிலும் படத்தை விற்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதில் நடித்த குழந்தைகளுக்கு சம்பளம் கொடுக்க கூடாது என்பது எங்கள் நோக்கமல்ல.. சிறிய பட்ஜெட் படம் என்பதால் சம்பளம் இல்லை என்பதையும், படத்தினால் அவர்களுக்கு கிடைக்கும் புகழ் மற்றும் விளம்பரத்தையும் எடுத்துச்சொல்லியே அவர்களை நடிக்க வைத்தோம்.. அப்படி ஏதாவது இந்தப்படத்தின் மூலம் பெரிய தொகை வந்தால் குழந்தை நட்சத்திரங்களுக்கு நாங்களே செட்டில் பண்ணிவிடுவோம்” என்றும் கூறியுள்ளார் அருண் விஸ்வன்..


குழந்தை தொழிலாளர் கொடுமையை விட மோசமான கொடுமையாக அல்லவா இது இருக்கிறது என மனித உரிமை ஆர்வலர்கள் படக்குழுவினர் மீது வழக்கு தொடுக்கவும் தயாராக உள்ளனராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in