பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
மலையாள நடிகர் ஜெயசூர்யாவின் மனைவி சரிதா. இவர் தனது கணவர் நடிக்கும் படங்களில் காஸ்ட்யூம் டிசைனராகவும் பணியாற்றி வருகிறார். அந்தவகையில் ஜெயசூர்யா நடித்த பிரேதம், புக்ரி ஆகிய படங்களில் இவர் வடிவமைத்த உடைகள் மலையாள ரசிகர்களிடையே டிரென்ட் ஆனது. அவரது காஸ்ட்யூம் டிசைனர் பணிக்கு மகுடம் சூட்டுவது போல சமீபத்திய நிகழ்வு ஒன்று நடைபெற்றது. ஆம்.. நடிகர் மோகன்லாலுக்கு புக்ரி வகை குர்தா வடிவமைத்து கொடுத்து அவரை ஆச்சர்யப்படுத்தியுள்ளார் சரிதா..
சில நாட்களுக்கு முன் ஜெயசூர்யாவை போனில் தொடர்பு கொண்ட மோகன்லால், தனக்கு புக்ரி மாடல் குர்தா டிசைன் பண்ணி தரமுடியுமா என சரிதாவிடம் கேட்டுள்ளார். இரட்டிப்பு சந்தோஷத்துடன் ஒப்புக்கொண்ட சரிதா, ஒன்றுக்கு இரண்டாக புக்ரி குர்தாக்களை வடிமைத்து, கணவர் ஜெயசூர்யாவுடன் மோகன்லாலின் வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். மோகன்லால் அவற்றை அணிந்து பார்த்து தனக்கு மிகவும் கச்சிதமாக பொருந்தியுள்ளதாகவும் சிறப்பாக வடிவமைத்துள்ளதாகவும் சரிதாவை பாராட்டினார்.