விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
நடிகர் மோகன்லால் தற்போது ஒரே நேரத்தில் மலையாளத்தில் 'வில்லன்' மற்றும் 'வெளிப்பாடிண்டே புஸ்தகம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.. இதில் 'வில்லன்' படத்தில் ஏறத்தாழ மோகன்லாலின் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. தற்போது விஷால், ஹன்ஷிகா காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.. காம்பினேஷன் காட்சிகள் இருந்தால் மட்டும் மோகன்லால் 'வில்லன்' படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். மற்றபடி முழுநேர படப்பிடிப்பு என்றால் அது இயக்குனர் லால் ஜோஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தின் ஷூட்டிங்ஸ்பாட்டில் தான்.
லால் ஜோஸ்-மோகன்லால் கூட்டணி பல வருடங்கள் கழித்து முதன்முறையாக இணைந்ததில் மிகுந்த சந்தோசம் அடைந்தவர்கள் என்றால் அது இயக்குனர்கள் பிரியதர்ஷனும் இயக்குனர் பத்ரனும் தான். இவர்கள் மோகன்லாலை வைத்து அதிக படங்களை இயக்கியவர்கள்.. இயக்குனர் லால் ஜோஸ் தனது ஆதர்ச இயக்குனர்களாக ஆராதிக்கும் பட்டியலில் இடம் பெற்றவர்கள்.. சமீபத்தில் இவர்கள் இருவரும் 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் விசிட் அடித்தனர். இவர்கள் வருகையால் உற்சாகமானார் மோகன்லால்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் வேலை ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, இவர்களது உற்சாகமான உரையாடலில் அவ்வபோது தானும் கலந்துகொண்டார் இயக்குனர் லால் ஜோஸ்.