ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
புதுமுக இயக்குனர் ரதீந்திரன் இயக்கத்தில், அஸ்வின், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துவரும் படம் 'இது வேதாளம் சொல்லும் கதை'. இந்தப் படத்தில் ஹிந்தி நடிகர் அபய் தியோலும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார்.
தமிழ் படத்தில் நடிப்பது பற்றி அபே தியோல் கூறியதாவது... "தமிழ் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியாவில் இரண்டாவது பெரிய சினிமா துறை தமிழ் சினிமா. இந்தப்படத்தில் நடிப்பதுடன் ஒரு தயாரிப்பாளராகவும் இணைந்துள்ளேன். நான் நடிப்பதாக மட்டும் தான் இருந்தது. ஆனால் இயக்குநர் ரதீந்திரன் எனக்கு நன்கு பழக்கமானவர். சில ஆண்டுகளுக்கு முன்னரே அவரை சந்தித்திருக்கிறேன். அப்போது நிறைய கதைகளுடன் அவர் வலம் வந்தார். அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. தமிழ் மொழியை உச்சரித்து நடிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் நிறைய பயிற்சி எடுத்து நடிக்கிறேன்". என்று கூறியுள்ளார்.