ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய், குழந்தை பிறப்பிற்கு மீண்டும் சினிமாவில் பிஸியாக நடிக்க தொடங்கியிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்னர் இவரது நடிப்பில் ஏய் தில் ஹே முஷ்கில் படம் வெளியானது. தற்போது, மணிரத்னம் உள்ளிட்டோரது படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில், மராத்திய படமான ஹர்த்யாந்தர்-ன் இசை வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகை ஐஸ்வர்யா கலந்து கொண்டு, இசையை வெளியிட்டார்.
பின்னர் அவர் பேசுகையில், "எனக்கு மராட்டிய படங்களில் நடிக்க ஆசையிருக்கிறது. நான் ஒரு நடிகை, நடிகைக்கு எந்த ஒரு மொழியும் கிடையாது. மராத்தி மட்டுமல்ல எனக்கேற்ற வேடமாக இருந்தால் நான் எந்த மொழியிலும் நடிப்பேன்" என்று கூறியுள்ளார்.