ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
யாவரும் நலம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நீத்து சந்திரா. அதன் பிறகு தீராத விளையாட்டு பிள்ளை, ஆதிபகவன், வைகை எக்ஸ்பிரஸ் படங்களில் நடித்தார். தற்போது இந்தி மற்றம் வடஇந்திய மொழி படங்களில் நடித்து வருகிறார். அதோடு தற்போது நாடகத்திலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது அவர் நடித்து வரும் உம்ராவோ ஜான் என்ற சரித்திர நாடகம் நல்ல வரவேற்புடன் மேடையேறிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து நீத்து சந்திரா கூறியிருப்பதாவது:
சரித்திர நாடகங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். உம்ராவோ ஜான் இன்னும் அதிகமான வரவேற்பை பெற்றிருக்கிறது. பல ஊர்களில் இருந்து நாடகம் நடத்த அழைப்பு வந்து கொண்டிருக்கிறது. நான் இப்போதுதான் நாடகத்தில் நடிக்கிறேன் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே தியேட்டர் ஆர்ட்டுக்குள் வந்து விட்டேன். நாடகத்திலிருந்துதான் சினிமாவுக்கு வந்தேன். சினிமாவில் பிசியாக இருந்தபோது கொஞ்ச காலம் நாடகத்துக்கு இடைவெளி விட்டிருந்தேன். இப்படியே போனால் நாடகத்தை கைவிட வேண்டியது வந்து விடும் என்று அதற்கென நேரம் ஒதுக்கி நாடகம் பக்கம் வந்திருக்கிறேன். சினிமாவில் எவ்வளவு பிசியாக நடித்தாலும் நாடகத்தை விட மாட்டேன். அது என்னோடு கலந்திருக்கிறது. என்கிறார் நீத்து.