'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தியாகராய நகரில் உள்ள இடத்தில் புதிய கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது. அந்தப் பகுதியை சேர்ந்த ஒருவர், சாலையை ஆக்கிரமித்து கட்டடம் கட்டப்பட இருப்பதாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மாநகராட்சி அதிகாரிகளும், வருவாய்துறை அதிகாரிகளும் இடம் ஆக்கிரமிக்கப்படவில்லை என்று கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். விரைவில் நடிகர் சங்கத்திற்கு ஆதரவான தீர்ப்பு வரும் என தெரிகிறது.
இந்த நிலையில் நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று கூடியது. தலைவர் நாசர் தலைமை தாங்கினார். பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பொன்வண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கட்டட பணிகளை விரைவுப்படுத்துவது, ஜி.எஸ்.டி வரி குறித்த அடுத்த நடவடிக்கை உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், பிரசன்னா, உதயா, ஸ்ரீமன், மனோபாலா, பிரேம், டி.பி.கஜேந்திரன், அஜய்ரத்னம், நிரோஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.