'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சென்னை: விவசாயிகள் நன்றாக இல்லை. நாம் நன்றாக உள்ளோம். ஆனால் நமக்கு சோறு போடும் விவசாயி நன்றாக இல்லை என நடிகர் விஜய் கூறினார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: அரிசியை உற்பத்தி செய்த விவசாயிகள் ரேஷனில் இலவச அரிசிக்காக காத்திருக்கின்றனர். விவசாயிகள் நன்றாக இல்லை. நாம் நன்றாக உள்ளோம். ஆனால் நமக்கு சோறு போடும் விவசாயி நன்றாக இல்லை. வல்லரசாக மாறுவதை பிறகு பார்த்து கொள்ளலாம்.முதலில் விவசாயி்களுக்கு நல்லரசாக மாற வேண்டும். அடுத்த சந்ததிக்கு உணவு இல்லாத நிலை ஏற்படும். விவசாய பிரச்னைக்கு அவசியமாக மட்டுமல்லாது அவசரமாகவும் தீர்வு காணப்பட வேண்டும். 3 வேளை உணவு சுலபமாக கிடைப்பதால் அதன் மதிப்பு தெரியாமல் போய் விட்டது. இப்போதும் ஆரோக்கியமில்லாத உணவு தான் கிடைக்கிறது என கூறினார்.