அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
கடந்த ஆண்டு கம்ப்யூட்டர் பொறியாளர் சுவாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவங்களை எந்த கற்பனையும் கலக்காமல் அப்படியே திரைப்படமாக எடுத்துள்ளனர். அதற்கு சுவாதி கொலை வழக்கு என்றே தலைப்பும் வைத்துள்ளார். விஜயகாந்த் நடிக்க உளவுத்துறை படத்தை இயக்கிய எஸ்.டி.ரமேஷ்செல்வன் இயக்கியுள்ளார். விஜயகாந்த் உதவியாளர் எஸ்.டி.சுப்பையா தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் என் அனுமதி இன்றி என் மகள் கொலை பற்றி திரைப்படம் எடுத்துள்ளனர். இந்தப் படம் வெளிவந்தால் என் குடும்பத்தினர் மனரீதியாக பாதிக்கப்படுவார்கள் எனவே படத்தை தடை செய்வதோடு, படத்தை எடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்துமாறு சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு டி.ஜி.பி.ராஜேந்திரன் உத்தரவிட்டார். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இயக்குனர் எஸ்.டி.ரமேஷ் செல்வன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். "ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரை பற்றி படம் எடுப்பது சட்டவிரோதம். வழக்கு நிலுவையில் உள்ள ஒரு விஷயத்தை படமாக எடுத்தால் அந்த விசாரணையை பாதிக்கும் என்பதால் இது நீதிமன்ற அவமதிப்பு எனவேதான் இயக்குனர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். விரைவில் அவர் கைது செய்யப்படலாம்" என்கிறார் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி ஒருவர்.