சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் |
1980-களில் நாயகனாக வலம்வந்தவர் நடிகர் எஸ்.வி.சேகர். அதன்பிறகும் அவ்வப்போது ஒரு படத்தில் நடித்து வரும் அவர், கடைசியாக மணல்கயிறு-2 படத்தில் கிட்டு மணியாக நடித்திருந்தார். மேலும், தணிக்கைகுழு அதிகாரியாகவும் செயல்பட்டு வரும் எஸ்.வி.சேகர், தான் நடிக்காத படங்களின் ஆடியோ விழாக்களிலும் கலந்து கொண்டு அந்த படங்களை வாழ்த்தி வருகிறார். அதோடு தணிக்கைக்குழு பற்றியும், இன்றைய இயக்குனர்களின் நிலை பற்றியும் தனது கருத்தினை பகிர்ந்து கொண்டு வருகிறார்.
அப்படி எஸ்.வி.சேகர் கூறுகையில், தணிக்கைக்குழுவின் விதிமுறைகளை தெரிந்து கொண்டு ஸ்கிரிப்ட் தயார் செய்யுங்கள். அப்படி இல்லாமல் படமாக்கும்போது கடைசி நேரத்தில் தேவையில்லாமல் படமாக்கிய காட்சிகளை கத்தரிக்க நேரிடும். அதோடு, ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு, சென்சார்போர்டுக்கு வராதீர்கள். முதலில் படத்தை சென்சார் செய்து விட்டு, அதன்பிறகு ரிலீஸ் தேதியை முடிவு செய்யுங்கள். இதனால் தேவையில்லாத பதட்டம், பயம் ஏற்படாது. அதோடு சென்சார் அதிகாரிகள் படங்கள் குறித்த சந்தேகங்களை கேட்கும்போது தைரியமாக சொல்லுங்கள். யாருக்கும் கைகட்டி நின்று பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
இப்படி சொல்லும் எஸ்.வி.சேகர், சென்சார்போர்டு அதிகாரியாகி விட்டதால், சினிமாவில் நடிப்பதை தான் நிறுத்தி விட்டதாக யாரும் கருத வேண்டாம் என்கிறார். இப்போதும் நடிப்பில் நான் முழு ஆர்வத்தில்தான் இருக்கிறேன். அதே சமயம், குள்ளமணி, போண்டாமணி நடிக்க வேண்டிய வேடங்களை எனக்குத்தராமல், எனக்கு பொருத்தமான வேடங்களை கொடுத்தால் கண்டிப்பாக நடிப்பேன். அதனால் கோலிவுட் இயக்குனர்கள் தங்கள் படங்களில் நடிக்க என்னை தாராளமாக அணுகலாம் என்கிறார் எஸ்.வி.சேகர்.