'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நாயகியாக வலம் வரும் ஸ்ருதிஹாசன் இந்த ஆண்டில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறார். அதிலும் மூன்று மொழிகளிலுமே அவர் தோல்வியைத் தழுவியிருப்பது தான் அதிர்ச்சியான தகவல்.
தமிழில் சூர்யா ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வெளிவந்த 'சி 3', தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக நடித்து வெளிவந்த 'கட்டமராயுடு', ஹிந்தியில் நடித்து நேற்று வெளிவந்த ''பெஹன் ஹொகி தெரி' ஆகிய மூன்று படங்களுமே ஸ்ருதிஹாசனுக்குத் தோல்விப் படங்கள்.
அதிலும் நேற்று வெளியான 'பெஹன் ஹொகி தெரி' படத்தை விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்தப் படத்திற்கு ஸ்ருதிஹாசன் தவறான தேர்வு என்றும், ஏதோ வேற்று கிரகத்திலிருந்து வந்தவர் போல அவர் நடித்திருக்கிறார் என்றும் முன்னணி ஹிந்தி பத்திரிகைகள் கூட ஸ்ருதிஹாசன் நடிப்பை விமர்சித்து எழுதியுள்ளன.
400 கோடி ரூபாய் செலவில் தயாராக உள்ள 'சங்கமித்ரா' படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலகியுள்ள நிலையில் அவர் கைவசம் அவருடைய அப்பா இயக்கி வரும் 'சபாஷ் நாயுடு' படம் மட்டுமே உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்றும் தெரியவில்லை. அப்படியே தொடங்கினாலும் இந்தப் படம் அடுத்த ஆண்டே வெளிவரும். ஸ்ருதிஹாசனைத் தேடி வேறு எந்த புதிய வாய்ப்புகளும் வராததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.