மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
'பாகுபலி' முதல் பாகத்தைப்போல 'பாகுபலி-2' படமும் பிரமாண்ட வெற்றி பெற்றதை தொடர்ந்து கர்நாடகாவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வழிபட்ட அனுஷ்கா, அப்படியே கேரளாவில் உள்ள சில கோவில்களுக்கு தனது குடும்பத்தினருடன் சென்று வழிபட்டு திரும்பியுள்ளார். இதற்கு தோதாக தற்போது அவர் தெலுங்கில் நடித்து வரும் 'பாக்மதி' படத்தின் படப்பிடிப்பும் பொள்ளாச்சி அருகில் நடைபெற்றதால் கேரளாவிற்கு செல்வது அவருக்கு வசதியாக போயிற்று. மேலும் அனுஷ்கா கேரளாவுக்கு வந்து மீண்டும் ஊருக்கு திரும்பும் வரை அவருக்கு உதவியாக மலையாள நடிகர் உன்னி முகுந்தன் உடனிருந்து அனைத்து பகுதிகளையும் சுற்றிக்காட்டியுள்ளார்..
'பாக்மதி' தெலுங்குப்படத்தில் அனுஷ்காவின் ஜோடியாக உன்னி முகுந்தன் நடித்துள்ளதையும் இருவரும் படங்களில் நடித்தபோது சக நடிகராக ஒருவருக்கொருவர் கொடுத்த ஒத்துழைப்பை பரஸ்பரம் பாராட்டி நன்றி தெரிவித்துக் கொண்டதையும் கடந்த வாரமே செய்தியாக கொடுத்திருந்தோம். அந்த நட்பின் அடிப்படையில் கேரளா வந்த அனுஷ்காவை கோவில்களுக்கு அழைத்து சென்றார் உன்னி முகுந்தன். அப்போது கேரளாவில் ஒட்டப்பாலம் பகுதியில் தனது நண்பர் அன்சாத் அலி என்பவர் நடத்திவரும் ஆயுர்வேத பண்ணை மற்றும் ஆயுர்வேத பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஆகியவற்றுக்கும் அனுஷ்காவை அழைத்து சென்று காட்டினார். அங்கே முகத்திற்கு தேவையான ஆயுர்வேத கிரீம்கள் மற்றும் முகத்திற்கான ஆயில் செய்வது குறித்து ஆர்வமாக விசாரித்து தெரிந்துகொண்டாராம் அனுஷ்கா.