பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
வருடத்திற்கு ஆறு படங்களுக்கு மேல் மலையாள நடிகர் பஹத் பாசில் படங்கள் ரிலீசான ஒரு காலகட்டமும் இருந்தது. ஆனால் வரிசையாக அனைத்தும் பிளாப் ஆனதால் படங்களில் எண்ணிகையை குறைத்துக்கொண்டு கதையில் கவனம் செலுத்தினார். அந்தவகையில் கடந்தவருடம் ஜனவரியில் வெளியான 'மகேஷிண்டே பிரதிகாரம்' படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவரது அடுத்த படமான 'டேக் ஆப்' வெளியாவதற்கு சுமார் 15 மாதங்களுக்கு மேல் ஆனது. அந்தப்படமும் ஓரளவு நல்ல பெயரை சம்பாதித்து தந்தது. இதனால் பஹத் பாசில் தற்போது கொஞ்சமே கொஞ்சம் அதிகமான படங்களில் நடித்து வருகிறார். தமிழில் வேலைக்காரன் மற்றும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் ஒரு படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்..
மலையாளத்திலோ 'ரோல் மாடல்' மற்றும் 'தொண்டிமுதலும் திரிக்சாட்சியும்' படங்கள் அவரது நடிப்பில் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. ஆனால் என்ன சிக்கல் என்றால் இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் தங்களது படங்களை இந்த மாதத்திலேயே வெளியிட வேண்டும் என ஒற்றைக்காலில் நிற்கின்றனர். அதன்படி ரபி மெக்கார்டின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ரோல் மாடல்' வரும் ஜூன்-23-ஆம் தேதியும், 'மகேஷிண்டே பிரதிகாரம்' மூலம் மீண்டும் பஹத் பாசிலை தூக்கி நிறுத்திய திலீஷ் போத்தன் இயக்கியுள்ள 'தொண்டிமுதலும் திரிக்சாட்சியும்' படம் ஜூன்-30-லும் என அடுத்தடுத்த வாரங்களில் வெளியாக இருக்கின்றன.