டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'பாகுபலி 2' படம் மாபெரும் வெற்றி பெற்று 1600 கோடியைத் தாண்டிய வசூலைப் பெற்றுவிட்டது. ஏறக்குறைய படத்தின் ஓட்டமும் முடிவுக்கு வர இருக்கிறது. ஆனாலும், படத்தைப் பற்றிய பல கேள்விகளை இன்னமும் சிலர் விடாமல் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். அதில் முக்கியமானது ஒரு கேள்வி, சிவகாமி கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி நடிக்காததன் காரணம் என்ன ?.
சிவகாமி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்து அவருடைய நடிப்பும் அனைவரின் பாராட்டையும் பெற்றுவிட்டது. ஸ்ரீதேவியே அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் கூட ரம்யா அளவிற்கு சிறப்பாக நடித்திருப்பாரா அல்லது அந்தக் கதாபாத்திரம் அவருக்கு பொருத்தமாக அமைந்திருக்குமா என்பதும் சந்தேகம்தான். அதற்குக் காரணம் விஜய் நடித்த 'புலி' கதாபாத்திரம். 'புலி' படம் பற்றியும், அந்தப் படத்தில் ஸ்ரீதேவி நடித்த கதாபாத்திரம் பற்றியும் தெரியாத சில ஹிந்தி பத்திரிகையாளர்கள் இன்னமும் ஸ்ரீதேவியுடம் 'பாகுபலி 2' பற்றி ஸ்ரீதேவியும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
சமீபத்தில் நடந்த 'மாம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அந்தக் கேள்விக்கு பதில் அளித்துவிட்டார் ஸ்ரீதேவி. “வேறு ஒருவர் நடித்து பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களும் வெற்றி பெற்று விட்டன. இன்னமும் அதைப் பற்றிப் பேசுவதால் என்ன பலன்,” என ஸ்ரீதேவி அந்தக் கேள்விகளுக்கு ஒரு பெரிய முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
'பாகுபலி 2' படத்தில் நடித்தவர்களே அடுத்த வேலைகளைப் பார்க்கப் போய்விட்ட பிறகு இன்னமும் 'பாகுபலி 2' பற்றி பேசுவதில் என்ன இருக்கிறது என ஸ்ரீதேவி நினைத்திருக்கலாம். அதானே...