போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் |
ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற போது, ஜல்லிக்கட்டு விளையாட்டிற்குத் தடை விதிக்கக் காரணமாக இருந்த பீட்டா அமைப்பை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. பீட்டா அமைப்பிற்கு ஆதரவாக இருந்த நடிகர், நடிகைகளை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. த்ரிஷா உள்ளிட்ட சிலர் பீட்டாவிற்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிவித்தனர். ஆனாலும், இன்னமும் சிலர் பீட்டா அமைப்பிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதோடு அவர்களின் பிரச்சார விளம்பரங்களிலும் நடித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கத்தி படத் தயாரிப்பின் போது ஈழத் தமிழர்களுக்கு எதிரான தயாரிப்பு நிறுவனம் என லைக்கா நிறுவனத்திற்கு எதிராக குரல் எழுந்தது. அந்த நிறுவனம் சார்பாக இலங்கையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஒரு விழாவிற்கு ரஜினிகாந்த் செல்ல உள்ளார் என்ற அறிவிப்பு வந்ததும் ரஜினிக்கு எதிராகவும் குரல் எழுந்தது. அந்த நிறுவனம் தற்போது ரஜினிகாந்த், எமி ஜாக்சன் நடிக்க ஷங்கர் தயாரிப்பில் 400 கோடி ரூபாய் செலவில் 2.0 படத்தைத் தயாரித்து வருகிறது.
2.0 படத்தின் நாயகியான எமி ஜாக்சன் தொடர்ந்து பீட்டாவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால், 2.0 பட வெளியீட்டின் போது மேலும் பிரச்சனைகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.