'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமா புராணப் படங்களிலிருந்து சமூக படங்களுக்கு மாறிய பிறகும் குடும்ப கண்ணீர் கதைகளைத்தான் தந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் ஆங்கிலப் படங்கள் போன்று ஆக்ஷ்ன் படங்களை கொடுத்தவர் மார்டன் தியேட்டர் டி.ஆர்.சுந்தரம். அந்த காலத்தில் ஆக்ஷ்ன் படங்களுக்கு சண்டைப் படங்கள் என்று பெயர். பயங்கர சண்டை காட்சிகள் நிறைந்த படம் என்று விளம்பரம் செய்வார்கள். அந்த வரிசையில் தமிழில் வெளிவந்த முதல் சண்டைப் படம் மாயா மாயவன். உன்னத முதல் தமிழ் சண்டைப்படம் என்று படத்துக்கு விளம்பரம் செய்தார்கள்.
படத்தை சம்பத்குமார் என்பவர் இயக்கினார். இவர் தியாகராஜ பாகவதரை வைத்து சில படங்களை இயக்கியவர். பிரபல நாடக நடிகர் டி.கே.சம்பங்கி ஹீரோவாக நடித்தார். சுசீலா தேவி ஹீரோயினாக நடித்தார். எஸ்.வேலசாமி கவி என்பவர் கதை எழுதினார். இவர் டி.ஆர்.சுந்தரத்திடம் உதவியாளராக இருந்தவர். 1938ம் ஆண்டு படம் வெளிவந்தது.
ஒரு காம வெறி பிடித்தவன் ஒரு நடன பெண்ணை கடத்தி வைத்துக் கொண்டு போலீஸ் கண்ணில் விரல்விட்டு ஆட்டுவான். ஒரு பெரிய பங்களாவில் அந்த பெண்ணை அடைத்து வைத்திருப்பான். அவனிடமிருந்து ஹீரோ அந்த பெண்ணை எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை. முழுக்க முழுக்க மார்டன் தியேட்டரில் அரங்கம் அமைத்து உருவான படம். ஹீரோ மாடியில் இருந்து குதிப்பது, எதிரிகளை தாவி தாவி தாக்குவது, கார் சேசிங், என ஆக்ஷ்ன் காட்சிகளை பார்த்து மக்கள் விசிலடித்து ரசித்தார்கள். படமும் பெரிய வெற்றி பெற்றது.