விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் |
ஆரஞ்சுமிட்டாய் படத்தை தயாரித்து நடித்த விஜய்சேதுபதி, தற்போது தயாரித்துள்ள படம் "மேற்கு தொடர்ச்சி மலை". லெனின் பாரதி இயக்கியுள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ஆண்டனி, காயத்ரி கிருஷ்ணா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது இளையராஜா, விஜய்சேதுபதி மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
அப்போது விஜய்சேதுபதி பேசுகையில், வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நானும், இந்த பட நாயகன் ஆண்டனியும் நடித்துள்ளோம். 2013-ல் இந்த மேற்கு தொடர்ச்சி மலை கதையை லெனின் பாரதி என்னிடம் சொன்னார். கதை பிடித்திருந்தது. ஆனால் அப்போது காசு இல்லை. சில படங்களில் நடித்து பணம் சம்பாதித்ததும் எடுக்கலாம் என்று சொன்னேன். அதுவரைக்கும் அவர் காத்திருந்தார். ஒரு வருடமாக கிராமத்து மக்களை இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார். சினிமாவை நன்றாக தெரிந்தவர். அவர் விருப்பப்பட்ட அவர் சொல்ல விரும்புகிற கதையை படமாக்கியிருக்கிறார். எனக்கு அவர் மேல் நம்பிக்கை உள்ளது. படம் முடித்த பிறகு போட்டு காண்பித்தார்.
மேலும், இந்த படத்தின் படப்பிடிப்புக்கு ஒருநாள்கூட நான் செல்லவில்லை. இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ள ஆண்டனி நல்ல திறமைசாலி. எந்த சீனை கொடுத்தாலும் அழகாக பிரசண்ட் பண்ணுவான். காயத்ரி கிருஷ்ணா ஒரு பக்க கதை என்ற படத்திற்கு ஆடிசன் பார்த்தனர். நல்ல நடிக்கக்கூடிய பெண் என்று சொன்னதால் அவரை ஒப்பந்தம் செய்தோம். இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள ஆறுபலா எனது பத்து வருட நண்பன், கோபப்படுவான். ஆனால் சிரிச்சிக்கிட்டே இருப்பான். ரொம்ப இன்னோசன்ட்.
இந்த படத்திற்கு இசையமைத்துள்ள இளையராஜா சாரின் இசைக்கு நான் அடிமை. காரில் நீண்டதூரம் போகும்போது ராஜா சார் பாடல் மற்றும் பின்னணி இசையை கேட்பேன். அவரோடு, அவருக்கு அருகில் இந்த மேடையில் நான் அமர்ந்திருப்பதே பெருமையான விசயம். மேலும், இந்த மேற்கு தொடர்ச்சி மலை படம் எளிய சாதாரண மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியிருக்கிறது. ஒரு சிட்டு குருவி கூடு கட்டனும்னு ஆசைப்படுது. ஆனால் சுத்தியிருக்கிற அரசியல் மற்றும் மனிதர்களால் அவன் என்னவாகிறான் என்பதுதான் கதை. ஒரு சாமானியனின் கதை இந்த மேற்கு தொடர்ச்சி மலை படம்" என்றார் விஜயசேதுபதி.