தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை சரண்யா மோகன். ஒரு நாள் ஒரு கனவு, யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயின்களில் தங்கையாக நடித்து வந்தவர், வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் ஹீரோயினாக மாறினார். தொடர்ந்து தமிழில் சில படங்களிலும், மலையாளத்தில் ஏராளமான படங்களிலும் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
சரண்யா மோகன் கடந்த 2015-ம் ஆண்டு, டாக்டர் அரவிந்த் கிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டார். சரண்யாவுக்கு இப்போது ஒரு ஆண் குழந்தை உள்ளது. சமீபத்தில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் போட்டோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் சரண்யா. அவரது போட்டோவை பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி. சரண்யா மோகனின் பிளஸை சின்னப்பொண்ணு போன்று அவரது தோற்றம் தான். ஆனால் இப்போது இது தான் சரண்யா மோகனா என்று கேட்கும் அளவுக்கு குண்டாகிவிட்டார். பொதுவாக பெண்களுக்கு குழந்தை பிறந்தபின்னர் உடல் எடை அதிகரிப்பது சகஜமான ஒன்று தான். ஆனால் இதை புரிந்து கொள்ளாத சிலர், அவரது உடல்தோற்றத்தை பார்த்து சமூக வலைதளங்களில் கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஆனால் இதற்கு கூலாக தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் சரண்யா.
இதுப்பற்றி சரண்யா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது... "பிரசவத்துக்கு பிறகு பெண்கள் குண்டாவது இயற்கை தான். அதுவும் 'சிசரியன்' செய்து கொண்டால், உடல் எடை அதிகரிக்கும். நான் தாய் ஆனதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் குழந்தைக்கு அமுதூட்டுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பெண்களுக்கு இது தான் முக்கியம், நான் தாயாக இருப்பதே பெருமை" என்று கூறியுள்ளார்.
சரண்யாவின் இந்த பதிவை பலரும் பாராட்டி வருகின்றனர்.