அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சிம்புவுடன் அச்சம் என்பது மடமையடா படத்தில் அறிமுகமான மஞ்சிமா மோகன், விக்ரம் பிரபுவுடன் சத்ரியன் படத்தில் நடித்திருப்பவர், அடுத்தபடியாக உதயநிதியுடன் இப்படை வெல்லும் படத்தில் நடிக்கிறார். இதையடுத்து மலையாளத்தில் இருந்து சில பட வாய்ப்புகள் வந்தபோது, தமிழில் வளரத் தொடங்கியிருக்கும் நேரத்தில் கவனத்தை வேறு பக்கம் திருப்பினால் இங்குள்ளவர்கள் மறந்து விடுவார்கள் என்று சொல்லிக்கொண்டு தொடர்ந்து தமிழில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும், அடுத்தபடியாக முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ள மஞ்சிமா மோகன், அவ்வப்போது ரசிகர்களுடன் டுவிட்டரில் உரையாடுவதையும் தொடர்ந்து வருகிறார். சமீபத்தில் அவர் உரையாடியபோது ஒரு ரசிகர், அஜித், விஜய் இருவரில் யார் பிடிக்கும் என்று கேட்டதற்கு இரண்டு பேருமே பிடிக்கும் என்று பொதுவான பதிலை கொடுத்துள்ளார். என்றாலும், அஜித்தின் அர்ப்பணிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று பதில் கொடுத்துள்ளார் மஞ்சிமாமோகன்.