தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கௌதம் மேனன் இயக்கிய 'ஏ மாய சேசவே' என்ற தெலுங்குப் படத்தில் முதல் முறையாக இணைந்து நடித்த நாக சைதன்யா, சமந்தா இருவரும் படப்பிடிப்பின் போதே காதல் கொண்டார்கள். அப்போதிலிருந்தே தங்களது காதலை ஆரம்பித்து வளர்த்துக் கொண்ட இருவரும் கடந்த வருடம்தான் அது பற்றி வெளியில் தெரிவித்தார்கள். பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரது நிச்சயதார்த்தமும் நடந்தது.
இவர்களது திருமணம் வரும் அக்டோபர் மாதம் 6ம் தேதி நடக்க உள்ளது. இது பற்றிய தகவலை நாக சைதன்யா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது தெரிவித்துள்ளார். திருமணம் கோவாவில் நடைபெற உள்ளதாம். இந்து, கிறிஸ்துவ முறைப்படி நடைபெற உள்ள இந்தத் திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது. அதன்பின் ஐதராபாத்தில் திருமண வரவேற்பு நடைபெற உள்ளது.
சென்னையைச் சேர்ந்த சமந்தா, தமிழ்ப் படங்களிலும் முன்னணி நடிகையாக உள்ளார். அதனால், சென்னையில் தனியாக திருமண வரவேற்பு இருக்குமா என்பது தெரியவில்லை.
சமந்தா தற்போது விஜய் 61, இரும்புத் திரை, அநீதிக் கதைகள், நடிகையர் திலகம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். திருமணத்திற்குப் பின்பும் நடிப்பேன் என்று அவர் ஏற்கெனவே அறிவித்துள்ளதால் இப்போதைக்கு திரையுலகத்தை விட்டு விலக வாய்ப்பில்லை.