அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
சில்வர் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள படம் அதாகப்பட்டது மகாஜனங்களே. இந்த படத்தில் நடிகர் தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதி நாயகனாக அறிமுகமாகிறார். அவருடன் ரேஸ்மா ரத்தோர், கருணாகரன், பாண்டி யராஜன், மனோபாலா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை இன்ப சேகரன் இயக்க, டி.இமான் இசையமைத்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தின் டிரைலரை வெளியிட்டார். இவ்விழாவில், டைரக்டர்கள் கே.எஸ். ரவிக்குமார், பேரரசு, சுராஜ், பிரபுசாலமன், ஈரம் அறிவழகன், டி.இமான், யுகபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது சிவகார்த்திகேயன் பேசுகையில், இந்த விழாவுக்கு நான் வந்ததற்கு இரண்டு, மூன்று காரணம் உள்ளது. அதில் முதல்காரணம் தம்பி ராமைய்யா அண்ணன்தான். அவர் வயசுக்கு அண்ணன் என்று கூப்பிட முடியாது என்பதால் சித்தப்பா என்றுதான் கூப்பிடுவேன். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச் சல், காக்கிசட்டை படங்களில் அவர் என்னுடன் நடிப்பது மிஸ்ஸாகிடுச்சு. ஆனால் வேலைக்காரனில் அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டது. விடாமுயற்சி என்பதற்கு சரியான உதாரணம் தம்பி ராமைய்யா தான். 30, 40 வயது வரை போராடி ஜெயிக்கனும்னு எல்லோருமே நினைப்பது இயற்கை தான். ஆனால் அந்த வயசுக்குப் பிறகும் சாதிக்க முடியும்னு தன்னை மட்டுமே நம்பி உழைத்தவர் அவர். இந்த வயதில் தேசிய விருது வரை வாங்கியவர். அதோடு வயசை ஒருநாளும அவரை காட்டிக்கொள்ள மாட்டார். அவ்ளோ எனர்ஜியாக இருப்பார்.
வேலைக்காரன் படத்தில் நான், பகத்பாசில், தம்பி ராமைய்யா, முனீஸ்காந்த், காளிவெங்கட், அருள்தாஸ், ஒய்.ஜி.மகேந்திரன், நிறைய பேர் நடிக்கிறோம். மலேசியாவில் படப்பிடிப்பு நடந்தபோது கேரவன் கிடையாது. ஒரே ரூமில்தான் எல்லோருமே இருப்போம். அப்போது தம்பி ராமைய்யா சார் பேச்சைதான் கேட்டுக்கொண்டேயிருப்போம். ஜாலியாக பேசிக்கொண்டேயிருப்பார், களைப்பெல்லாம் போயிடும். அவருக்கு கிடைத்திருக்கிற இந்த சந்தர்ப்பத்தையும், மற்றவர்களையும் அவர் அவ்ளோ நேசிக்கிறார். அதனால்தான் அவரை எல்லோருமே நேசிக்கிறோம். அவரோட அன்புக்காகத்தான் நான் இந்த விழாவுக்கு வந்தேன்.
அவரது மகன் உமாபதியை தம்பி என்று சொல்லலாம். அவர் அண்ணன் என்று உரிமையோடு கூப்பிட்டு விட்டார். சூப்பராக டான்ஸ் ஆடியிருக்கிறார். நான் மனம் கொத்திப்பறவையில் இமான் அண்ணன் போட்ட டியூனுக்கு ஆட முடியலையே என்று வருத்தப்பட்டேன். அப்போது டுவிட்டரில் யாரோ, ஏம்பா தம்பி எக்சசைஸ் பண்றே. நல்ல பாட்டுதான் போட்டிருக்கிறார் என்று கமெண்ட் கொடுத்திருந்தார்கள். நான் ஒருமாதிரி ஆகிவிட்டேன், அதன்பிறகு ஒவ்வொரு படமாக முயற்சி செய்து இப்போது பெட்டராகிக்கொண்டே வருது. ஆனால் உமாபதி அப்படியல்ல, ஹிருத்திக் ரோஷன் மாதிரி ஆடியிருக்கிறார். இன்னும் நிறைய படங்கள் பண்ணும்போது டான்ஸ்ன்னா இவர்தான் என்று வந்துவிடும். இந்த படம் உமாபதிக்கு ஒரு சூப்பரான ஓப்பனிங் கொடுக்கும். நீங்க ஜெயிக்கிறது மட்டுமில்லாம தம்பி ராமைய்யா சாரை சந்தோசமாக வச்சிக்கிடுற பொறுப்பும் உங்களுக்கு உள்ளது.
எனக்கு எங்க அப்பாவ சந்தோசமாக வச்சிக்கிடனும் என்ற ஆசை உள்ளது. ஆனால் அவர் உயிரோடு இல்லை. ஆனால் உமாபதிக்கு அந்த வாய்ப்பு உள்ளது. அதனால் ஒரு அண்ணனாக அவருக்கு அட்வைஸ் பண்றேன். எங்க அப்பா 2003ல் இறந்துட்டாங்க. அப்போது எனக்கு 17 வயசு. 14 வருடத்துக்கு அப்புறம் எங்க அப்பாவை பற்றி ஒரு சினிமா மேடையில பேசும்போது ரொம்ப ரொம்ப சந்தோசமா இருந்தது. அதுக்காக தம்பி ராமைய்யா சாருக்கு நன்றி சொல்லிக்கிறேன்.
எங்க அப்பா இறந்து 14 வருடத்திற்கு பிறகு ரெண்டு பேரு அவரை பற்றி எங்கிட்ட அரை மணி நேரம் பேசியிருக்காங்க. முதன்முறையாக அவரைப்பற்றி பேசினது நக்கீரன் கோபால். ஒரு திருமண அழைப்பிதழ் தருவதற்காக வீட்டிற்கு வந்தபோது எங்க அப்பா போட்டோவைப் பார்த்துட்டு, நீங்க சூப்பிரண்டு தாஸ் அண்ணன் மகனா என்று கேட்டார், எனக்கு ஷாக்கிங்கா இருந்தது. நீங்க எவ்ளோ பெரிய மனிதரோட பையன் என்று அவர் சொன்னபோது ரொம்ப பெருமையாக இருந்தது. எங்க அப்பா அவ்ளோ சின்சியரான மனிதர். ஆனாலும் எங்க சூப்பர்னு நானே சொல்ல முடியாதுல்ல. இப்படி எங்க அப்பாவைப்பற்றி சொன்ன நக்கீரன் கோபால், தம்பி ராமைய்யா ஆகிய இரண்டு பேருக்குமே நான் நன்றி சொல்லிக்கிறேன். அதையடுத்து இப்ப எங்க அப்பாவைப்பற்றி பேசுறது மாதிரி, நான் இறந்த பிறகும் என்னைப்பற்றி ரெண்டு பேராவது பேசனும்னு ஆசைப்படுகிறேன்.
சேனல்களில் இருந்து இப்போது நிறையபேரு வர்றாங்க. ரங்கூன் டைரக்டர் ராஜ்குமாரைத் தொடர்ந்து இந்த அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தை இயக்கியுள்ள இன்பசேகரனும் வந்திருக்கிறார். அவருக்கு என்னோட வாழ்த்துக்கள்.
முன்னதாக, விழா தொடங்கியதும், அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தை வெளியிடும் பி.டி.செல்வகுமார், சிவகார்த்திகேயனை இளம் சூப்பர் ஸ்டார் என்று பேசினார். அவருக்கு பதில் கொடுக்கும் விதமாக சிவகார்த்திகேயன் கூறுகையில், ஒரு பாய்ண்டை சொல்லி எனக்கு அதிர்ச்சியை கொடுத்தவர் பி.டி.செல்வ குமார் சார். என்ன சொன்னீங்கன்னு நான் சொல்ல மாட்டேன். அதெல்லாம் வேண்டாம் சார். அது நானில்லை சார். நாம யாருன்னு தெரியும். எங்க இருந்து வந்திருக்கோம்னு தெரியும். அதெல்லாம் புரிஞ்சிட்டுன்னா இந்த மாதிரி விசயங்களை காதில் எடுத்துக்கொள்ளவே மாட்டோம். நம்ம செய்ற வேலை எல்லோருக்கும் ரீச்சாகினா போதும். இந்த மாதிரி விசயங்களெல்லாம் வேண்டாம் சார். என் படம் எல்லோருக்கு பிடிச்சிதுன்னா அதுவே போதும். நாம் பாட்டுக்கு ஒரு ரூட்டு எடுத்து போய்க்கிட்டேயிருக்கேன். விமர்சனம் பண்ணினா திருத்திக்கிட்டு நடிப்பேன் என்றார் சிவகார்த்திகேயன்.