'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் முத்துராமனின் பேரனும், கார்த்திக் மகனுமான கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளிவரும் படம் ரங்கூன். படம் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்:
ரங்கூன் படம் பற்றி சொல்லுங்கள்?
புதுமுக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நான் நடித்துள்ள படம் இது. பர்மா என்றழைக்கப்பட்ட, ரங்கூனில் பிறந்த எஸ்.வெங்கடேஷ் என்ற தமிழ் பையன் நான். அங்கிருந்து வட சென்னைக்கு வந்து, அங்கு சந்திக்கும் சம்பவங்கள், பிரச்னைகள் பற்றியது தான் இந்த படம். திரில்லர், காதல், காமெடி என, எல்லாமே இருக்கு. வட சென்னை மொழி பேசிருக்கேன்; முதல் முறையா, குத்துபாட்டுக்கு ஆடி இருக்கேன்.
நீங்க எப்படி இந்த கதாபாத்திரத்துக்கு, செட் ஆனீங்க?
இயக்குனர் மொத்தமாவே என்னை மாற்றி விட்டார். என் நிறத்தை கருப்பாக்கினார்; பர்மா லுங்கி கட்டவிட்டார்; முடி ஸ்டைல் மாற்றினார். லோக்கல் தமிழ் பேசிருக்கேன். மேக் அப் செய்யவே இரண்டு மூணு மணி நேரம் ஆனது. இயக்குனர் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை வீணடிக்காமல், முடிந்த வரை சிறப்பாக செய்திருக்கேன்.
இந்த படத்தில் நீங்க கற்றுக் கொண்ட விஷயம் ஏதும்...?
ஒரு நடிகனா இந்த படத்தில் நிறைய கற்றுக் கொண்டேன். கொஞ்சம் சிரத்தை எடுத்தும் நடித்திருக்கேன். சென்னையில் இப்படி ஒரு உலகம் இருக்கா என்று ஆச்சரியமுடன் பார்த்தேன். காசிமேடு, பாரிஸ், வட சென்னை மக்கள் வாழ்க்கை முறையில், ஒரு சின்ன பர்மாவே இருக்குன்னு சொல்லலாம். எல்லாரும் அழகா இருக்காங்க; பர்மா மொழி பேசுறாங்க... எனக்கு இதெல்லாம் புதிதாக இருந்தது.
மணிரத்னம் படத்தில் நடிப்பதற்கும், புது இயக்குனர்கள் படத்தில் நடிப்பதற்கும் என்ன வித்தியாசம்?
மணி சார் படத்தில் நடிக்கும் போது, மொத்தமா என்னை கொடுத்திடுவேன். அவர் சொல்வதை, அப்படியே கேட்டு செய்வேன். ஆனால், புது இயக்குனர்களோடு வேலை செய்யும் போது, கொஞ்சம், டிஸ்கஸ் பண்ணி செய்வேன்; புதுசா முயற்சி செய்யலாம்.
தாத்தா நடிப்பிற்கும், அப்பா நடிப்பிற்கும் உள்ள வேறுபாடு?
தாத்தா நடிப்பு, அவர் பேசுறது, எல்லாமே ரொம்ப தெளிவா இருக்கும். தமிழ் அவ்ளோ அருமையா பேசுவார். அப்பா, ரொம்ப லைட்டா, ஜாலியா நடிச்சிட்டு போய்டுவார், ரெண்டு பேருமே, வித்தியாசமாத் தான் நடிச்சாங்க. முடிஞ்ச அளவு, தாத்தா, அப்பாவை பின் தொடர நினைக்கிறேன்.
உங்க அப்பா பேசுவது உங்களுக்கு புரியுமா?
அப்பா பெரும்பாலும் என்னிடம் ஆங்கிலத்தில் தான் பேசுவார். அதனால் என்னால் ஈசியா புரிந்து கொள்ள முடிகிறது. நீ செய்றதை நுாறு சதவீதம் சரியா செய். ஏதும் கஷ்டம் வந்தால், அதை மனதில் போட்டு அழுத்திக்காதே... ஜாலியா இருன்னு சொல்வார்.
அப்பா அளவுக்கு, மக்கள் மத்தியில், உங்களை தெரியல என்பது உண்மை தானே?
அப்பா அளவுக்கு மக்களிடம் நான், ரீச் ஆகலை என்பது உண்மை தான். ஆனால் அதை, போகப் போக, மாற்றி காட்டுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. அதுக்காக கொஞ்சம் மெனக்கெடவும் தயாரா இருக்கேன்.
கடல் படம் வந்த சமயம், மொத்த ரசிகர்களும் உங்களை ரசித்த மாதிரி இருந்தது. ஆனால் இடையில் சரியான படங்கள் அமையவில்லையே... என்ன காரணம்?
கடல் படத்துக்கு பின், சில படங்கள் நடித்தேன். இதில் சரியா போகாத படங்களும் உண்டு. இப்ப பத்தாவது படம் நடிக்கிறேன். புதுமுகமா வரும் போது சில தோல்விகள் வரும்; அதை படிப்பினையா எடுத்துக்கணும். இப்ப நான் நிறைய, ரிஸ்க் எடுக்க தயாராகிட்டேன். இனி வரப் போகும் என் படங்களை பார்த்து, நீங்களே அடுத்த முறை, கேள்வியை மாத்தி கேப்பீங்க. தயவு செய்து எனக்கு, சப்போர்ட் பண்ணுங்க!
ஒரு படம் வெற்றி பெற, நடிகர் ரொம்ப அழகா இருந்தா போதுமா இல்லை, கதை அழகானதா அமையணுமா?
எல்லாமே சரியா அமையணும். நடிகர், இயக்கம், ஒளிப்பதிவு, இசை, காமெடி என்று எல்லாமே சரியா இருந்தால் தான், ஒரு படம் வெற்றி பெற முடியும். ஆனால் அதுக்கும் மேல, மக்கள், எப்ப, எந்த படத்தை ரசிப்பாங்கன்னு, யாருக்குமே தெரியாது.
பைக் பிரியர் ஆச்சே நீங்க... நேரம் கிடைக்குதா?
சின்ன வயசில இருந்து ரெண்டு விஷயம் எனக்கு பிடித்தது. ஒண்ணு, கிடார் வாசிப்பது; இன்னொண்ணு, பைக் ஓட்டுவது. இப்ப ரெண்டுக்குமே நேரம் கிடைப்பதில்லை. கிடார் வாசிக்கணும்ன்னு ஆசைப்படறேன்; மாசத்துல ஒரு நாளாவது, பைக் ஓட்டணும்ன்னு நினைக்கிறேன். நேரம் கிடைக்கலை.
சினிமாவுக்கு வந்த பின், நீங்க மாறிய விஷயங்கள்?
கண்டிப்பா, டிரஸ் விஷயத்தில் பயங்கரமா மாறி இருக்கேன். முன்பெல்லாம் டிரஸ் விஷயத்தில் பெரிதாக கவனிக்க மாட்டேன்; வசதியா இருக்கான்னு தான் பார்ப்பேன். ஆனால் இப்ப எல்லாரும் கவனிக்கிறாங்க என்பதால், நான் பயன்படுத்தும் டிரஸ்சை, பார்த்துப் பார்த்து எடுக்க வேண்டி இருக்கு; பயன்படுத்த வேண்டி இருக்கு.
நீங்க ரொம்ப பொய் பேசுவீங்களோ?
நான் எப்ப பொய் பேசுறேன்; எப்ப உண்மை பேசுறேன்னு எனக்கே தெரியாது.
ப்ரியா ஆனந்த் உங்களோட ஸ்பெஷல் நட்பா? நிறைய, கிசுகிசு வருதே?
ப்ரியாவையும், என்னையும் வைத்து நிறைய பேர் எழுதுறாங்க. சொல்ல போனால், கடல் படத்துக்கு முன்பே, நானும், ப்ரியாவும் நல்ல நண்பர்கள். இண்டஸ்ட்ரில ஹீரோயினா, எனக்கு நல்ல பிரெண்ட் ப்ரியா. அதனால், காபி சாப்பிட போவோம்; ஐஸ்கிரீம் சாப்பிட போவோம். பல பேர் பார்ப்பாங்க... அதனால் அவங்களுக்கு வேற ஏதும் தோணலாம். ப்ரியா என் குடும்பத்தோடு பழகும் பெண்; அவ்ளோ தான்!
அப்பா படங்களை, ரீமேக் செய்தால், எந்த படத்தில் நடிக்க ஆசை?
என்னோட, பேவரைட் படம், சுந்தர் சி இயக்கிய, உள்ளத்தை அள்ளித் தா.