600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
பார்வை ஒன்றே போதுமே போன்ற படங்களின் இசை அமைப்பாளர் பரணி, ஒண்டிக்கட்டை படத்தின் மூலம் இயக்குனராகி உள்ளார். அவரிடம் பேசிய போது... இசையமைப்பாளராக என் பயணத்தை துவங்கி, 18 ஆண்டுகளாகி விட்டன. இதுவரை எனக்கு கிடைத்த அனுபவங்களையும், கற்றுத் தேர்ந்த விஷயங்களையும், இந்த படத்தில் பயன்படுத்தி இருக்கிறேன். நான் இசைத் துறையிலிருந்து, இயக்கத் துறைக்கு அடியெடுத்து வைத்திருக்கிறேன். கிராமத்து நாகரிகத்தை இதில் பதிவிட்டிருக்கிறேன். படத்தின் கதாபாத்திரங்கள் பேசப்படும் மாதிரி உருவாக்கப்பட்டுள்ளன. நாம் பிறந்த போதும் ஒண்டிக்கட்டையாகத் தான் பிறக்கிறோம். போகும் போதும், ஒண்டிக்கட்டையாகத் தான் போகப் போகிறோம். இதைத் தான் இதில் சொல்கிறேன். இந்தப் படத்தில் விக்ரம் ஜெகதீஷ், ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். இசை வெளியீட்டின் போதே, பலரும் இவர் நடிப்பை பாராட்டினர். நடன இயக்குனர்சிவசங்கர், கைகடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கி சிறப்பித்தார். இதனால் ஹீரோ, ரொம்ப நெகிழ்ந்து அழுதுவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.