ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சில நாட்களுக்கு முன் தெலுங்கு திரையுலகின் மிக பிரபலமான இயக்குனரும் 150 படங்களை இயக்கிய சாதனைக்கு சொந்தக்காரருமான தாசரி நாராயணராவ் காலமானர். இவருக்கு வயது 75. இந்த வயதிலும் படம் இயக்கும் சுறுசுறுப்புடன் வளைய வந்துகொண்டிருந்த தாசரி நாராயணராவ் இப்படி திடீரென மரணத்தை தழுவ, அவர் கடந்த ஒருவருடமாக எடுத்துவந்த எடைக்குறைப்பு அறுவை சிகிச்சையும் ஒருகட்டத்தில் அது பெயிலியர் ஆனதும் தான் காரணம் என அவரது மகள் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் முதன்முதலாக எடையை குறைப்பதற்காக பலூன் சர்ஜரி என்கிற அறுவை சிகிச்சை செய்துகொண்டார் தாசரி நாராயணராவ். அது வெற்றிகரமாக முடிந்து சில கிலோக்கள் எடை குறைந்தது. அதனால் இன்னும் கொஞ்சம் எடையை குறைக்க மீண்டும் அதேபோல் ஒரு சிகிச்சையை சில மாதங்கள் கழித்து மேற்கொண்டார் தாசரி. ஆனால் இந்தமுறை அறுவை சிகிச்சை செய்தது வேறு ஒரு டாக்டர். சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்த சில நாட்களிலேயே ரொம்பவே அசௌகரியமாக தாசரி உணர்ந்தார். குறிப்பாக திட உணவு எதுவும் உண்ண முடியாமல் ட்யூப் மூலமாக திரவ உணவு மட்டுமே அவருக்கு கொடுக்கப்பட்டு வந்தது.
இதை தொடர்ந்து டாக்டர்கள் பரிசோதித்ததில் இரண்டாவது சிகிச்சை பெயிலியர் ஆன விஷயம் தெரியவந்தது. இதனால் மீண்டும் ஒரு அறுவை சிகிசைக்கு தயாரான தாசரி, இந்த சிகிச்சையில் கடந்த சிகிச்சையால் ஏற்பட்ட பிரச்சனைகளை சரிசெய்து, வழக்கமான உணவுகளை சாப்பிடும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிடலாம் என நினைத்துள்ளார். ஆனால் மீண்டும் சமீபத்தில் அவருக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சையும் தோல்வியடையவே, மருத்துவர்களால் அந்த மாபெரும் கலைஞனின் உயிரை காப்பாற்ற முடியாமலேயே போய்விட்டது என தெரிவித்திருக்கிறார்.