மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
கெளதமபுத்ரா சட்டகர்னி என்ற 100வது படத்தைத் தொடர்ந்து தற்போது தனது 101வது படத்தில் நடித்து வருகிறார் பாலகிருஷ்ணா. செப்டம்பர் 29-ந்தேதி திரைக்கு வரும் இந்த படத்தை பூரி ஜகன்னாத் இயக்கியிருக்கிறார். இதில் டான் வேடத்தில் நடிக்கிறார் பாலகிருஷ்ணா. ஆந்திராவில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்போது போர்ச்சுக்கல் நாட்டில் நடக்கிறது. மேலும். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டீல் நாளை (ஜூன் 9) வெளியாகிறது.
இந்த படத்திற்காக பல டைட்டில்களை யோசித்து வந்த டைரக்டர் பூரிஜெகன்னாத், தற்போது உஸ்தாத், ஜெய்பாளையம் என்ற இரண்டு டைட்டீல்களில் எந்த டைட்டீலை படத்திற்கு வைக்கலாம் என்று பரிசீலித்து வருவதாக தெரிவித்திருப்பவர், பாலகிருஷ்ணாவின் 101வது படத்தின் தலைப்பு நாளை வெள்ளிக்கிழமை பர்ஸ்ட் லுக்குடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.