டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த இரண்டு வாரங்களாக 'மாட்டிறைச்சி தடை' குறித்த செய்திகள் தான் ஹாட் டாபிக் ஆக இருக்கிறது. மத்திய அரசின் இந்த தடை குறித்து அரசியல் கட்சிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில் சினிமா துறையில் இருந்து பெரிய அளவில் ஆதரவுக்குரலோ அல்லது எதிர்ப்புக்குரலோ கிளம்பவில்லை. கமல் மற்றும் நடிகர் சித்தார்த் என விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் திரையுலகில் இருந்து இதற்கான எதிர்ப்பு குரல் கிளம்பியது. தற்போது நடிகர் அரவிந்த்சாமியும், இந்த மாட்டிறைச்சி தடை குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். குறிப்பாக இதில் தனது எதிர்ப்பை மறைமுகமாக வைத்து அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் அரவிந்த்சாமி.
இதுபற்றி அவர் கூறுகையில், “ஊட்டச்சத்து குறைபாட்டினால் குழந்தைகள் சிரமப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா டாப் ரேங்கில் ஒன்றாக இருக்கிறது.. அதாவது உலகத்தில் பட்டினியால் வாடுவோர் பட்டியலில் 67/80 என்கிற இடத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒருவரது மேஜையில் இருந்து உணவுகளை எடுப்பதற்கு காரணங்களை கண்டுபிடிக்கிறோம்.. அதே செயல்பாட்டை அவர்களுக்கு ஆரோக்கியமான உணவை வழங்குவதிலும் காட்டவேண்டும்.. இதுதான் அனைத்து மதத்தினரின் விருப்பமாக இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார் அரவிந்த்சாமி.