Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

“ராஜமவுலி படத்தின் கதை என்னுடையது தான்” : பிரபல எழுத்தாளர் வழக்கு..!

07 ஜூன், 2017 - 18:01 IST
எழுத்தின் அளவு:
Magadheera-story-is-mine---Writer-complaint

'பாகுபலி' இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி வழக்கமான கமர்ஷியல் படங்களை இயக்கி வந்தாலும் அவர் மீது ஒட்டுமொத்த கவனத்தையும் திரும்ப வைத்தது அவர் இயக்கத்தில் உருவான மகதீரா தான். ராம்சரண்-காஜல் அகர்வால் நடித்த இந்தப்படத்தின் கதையையும், ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தான் எழுதியிருந்தார். ஆனால் சமீபத்தில் இந்தப்படத்தின் கதையை தழுவி இந்தியில் 'ராப்தா' என்கிற படம் எடுக்கப்பட்டதாக தெரியவந்தது. இதை தொடர்ந்து 'மகதீரா' பட தயாரிப்பாளரான அல்லு அரவிந்த் 'ராப்தா' பட தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்..


இது ஒருபக்கம் இருக்க, 'மகதீரா' படத்தின் கதையே தான் எழுதிய நூலில் இருந்து அதிகாரப்பூர்வமற்ற முறையில் தழுவி எடுக்கப்பட்டதுதான் என புதிய பூதம் ஒன்றை கிளப்பி விட்டுள்ளார் பிரபல எழுத்தாளர் எஸ்.பி.சாரி என்பவர். தான் எழுதிய நாவலான 'சந்தேரி'யை தழுவித்தான் 'மகதீரா' படம் எடுக்கப்பட்டதாக ஐதராபாத் சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் எஸ்.பி.சாரி.


“நான் எழுதிய கதையில் வரலாறு நாயகன், நாயகியை ஒன்று சேரவிடாமல் நாயகியின் அண்ணன் தடுப்பதாக இருக்கும். பின்னர் அவர்கள் நவீன காலத்தில் ஒன்று சேர்வார்கள். ஆனால் மகதீரா படத்திற்காக அண்ணன் கேரக்டரை முறைமாமன் ஆக மாற்றிவிட்டார்கள். இதற்காக எனக்கு எந்தவிதமான வெகுமானமும் வழங்கப்படவில்லை” என கூறியுள்ளார் சாரி.


இதில் கவனிக்கத்தக்க இன்னொரு விஷயம் என்னவென்றால் இவரே இந்த கதையை நானூறு வருடங்களுக்கு முன் மத்திய பிரதேசத்தில் வாழ்ந்த இந்துமதி என்கிற ராணியின் வாழ்க்கை வரலாற்றை தழுவித்தான் எழுதினாராம். அதுமட்டுமல்ல இத்தனை வருடங்கள் கழித்து மகதீரா மீது இவர் திடீர் உரிமை கொண்டாடுவது ஏன் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in