பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை |
பாகுபலி படத்தை தொடர்ந்து நடிகர் பிரபாஸை பல நிறுவனங்கள் தங்களது விளம்பர தூதராக நியமிக்க போட்டி போட்டன. ஆனால் பாகுபலி-2 வெளியாகும் வரை விளம்பர படங்கள் பக்கம் தனது கவனத்தை திருப்பாமல் இருந்தார் பிரபாஸ். தற்போது 'பாகுபலி-2' வெளியாகி பிரபாஸின் புகழை இன்னும் அதிகப்படுத்தியுள்ள நிலையில் பிரபல மொபைல் நிறுவனமான ஜியானி, பிரபாஸை தங்களது நிறுவனத்தின் இந்திய விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்து அறிவித்துள்ளது..
இந்த நிறுவனத்தின் கேரள விளம்பர தூதராக ஏற்கனவே துல்கர் சல்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவருமே புகழ்பெற்ற திரையுலக பிரபலங்கள் என்பதால் இவர்கள் இருவரையும் இணைத்து தங்களது நிறுவனத்தின் விளம்பர படம் ஒன்றை உருவாக திட்டமிட்டுள்ளதாம் இந்த ஜியானி நிறுவனம். இந்த நிறுவனத்தின் தூதர்களாக ஏற்கனவே அலியா பட், ஸ்ருதிஹாசன், விராட் கோஹ்லி ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.