ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
கலையரசன், காளி வெங்கட், ஷாலின், வைஷாலி மற்றும் பலர் நடித்த ராஜா மந்திரி படத்தை இயக்கியவர் உஷா கிருஷ்ணன். கேன்சர் நோயாளிகளுக்கு உதவும் எண்ணத்தில் தன்னுடைய தலை முடியை தானம் செய்திருக்கிறார். இது பற்றி அவருடைய முகப் புத்தகத்தில் கூறியிருப்பதாவது,
ஏன்..? ஏன் திடீர்னு hair donation? திடீர்னுலாம் இல்ல.. நிறைய தடைவை யோசிச்சிருக்கேன். கேன்சர் பேஷண்ட்ஸ்க்கு ஹேர் டொனேட் பண்ண மினிமம் 15 இன்ச் இருக்கனும். வளரட்டும்.. யோசிப்போம்னு விட்டுட்டேன். வளர்ந்துடுச்சு.. பாய்கட் பண்ணலாம்னு நெனச்சா இருந்ததே 15 இன்ச் தான்.
என்னை மொட்டைல பாக்க எனக்கே தைரியம் இல்ல... அதனால வேணாம்னு தள்ளிப்போட்டேன். ஆனா திரும்ப திரும்ப தோனிட்டே இருந்துச்சு.. இப்ப இல்லன்னா இனி எப்பதான்னு முடிவெடுத்து, மறு யோசனைக்கு போகாம, யாரு என்ன ரியாக்ஷன் கொடுப்பாங்கனு யோசிக்காம, டோனார் ரூல்ஸ ஒழுங்கா படிச்சிட்டு green trendsல போய் உக்காந்துட்டேன்.
ரூல்ஸ்: 1. குறைஞ்சது 15 இன்ச் இருக்கனும்.
2. பொடுகு, வேற தலைப் பிரச்சனைகள் இருக்கக்கூடாது.
3. பெர்மனண்ட் கலரிங், டையிங், கர்லிங் பண்ணிருக்ககூடாது.
4. போனி டெயில் போட்டு, முனைகள் சமமாக வெட்டப்பட்டு, பகுதி பகுதியாகப் பிரித்து, இறுக்கமாக கட்டவேண்டும். வெட்டி தரையில் விழுந்ததோ, முறையாக அடுக்கப்படாததையோ வைத்து விக் செய்யமுடியாது.
அவ்ளோ தான் மூன்று பகுதியா பிரித்து, கட்டியிருந்த முடியை ஒரு பாலீத்தின் பையில் வைத்து சீல் செய்து, அடையார் கேன்சர் இன்ஸ்டியூட்டின், ஆந்திரா பேங்க் பில்டிங்கின், மூன்றாவது தளத்தில் உள்ள ஹேர் டோனார் பிரிவில் கொடுத்துட்டேன். அம்மாதான் கொஞ்சம் கோபப்பட்டாங்க.. முடி தான.. வளர்ந்துடும்..”எனத் தெரிவித்திருக்கிறார்.
பெண்கள் அவர்களுடைய தலைமுடியை கண்ணும் கருத்துமாக பாதுகாப்பார்கள். ஒரு நல்ல விஷயத்திற்காக உஷா கிருஷ்ணன் தலைமுடியை தானம் செய்திருப்பதற்கு அவருடைய முகப்புத்தகத்தில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து உஷா கிருஷ்ணனை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் நம்மிடம் கூறியதாவது... "தலைமுடியை கொடுக்கவும் மனசு வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தில் நான் எம்எஸ்சி., எலக்ட்ரானிக் படித்தபோது அடையார் கேன்சர் இன்ஸ்ட்டியூட் வழியாக தான் செல்வேன். அங்கு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட நிறைய பேர் முடியை இழந்து இருப்பதை கண்டிருக்கிறேன். குறிப்பாக குழந்தைகள் பலருக்கு முடி வளராமல் இருப்பதை கண்டேன். ஹீமோதெரபி செய்யும் போது சிலருக்கு முடி வளராது, விக் வைக்க வேண்டும் என்றால் பணம் நிறைய செலவாகும். ஆகையால், எனது முடியை குழந்தைகளுக்கு தானமாக கொடுக்க முடிவு செய்து, முடியை வளர்த்து இப்போது தான் செய்துள்ளேன். இறந்த பிறகு தான் கண் தானம் செய்ய முடியும். ஆனால் தலைமுடியை உயிரோடு இருக்கும்போதும் தானம் செய்யலாம், இது நல்ல விஷயம்" என்றார்.