சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி |
ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் பிரசாத் தேவினேனி, ஷோபூ யர்லஹட்டா ஆகிய இருவரும் இணைந்து ஆர்கா மீடியா ஒர்க்ஸ் சார்பில் தயாரித்தனர். இரண்டு பாகங்களையும் தலா 250 கோடி செலவு செய்து தயாரித்த அவர்கள் ரூ. 1600 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளனர். இந்நிலையில், அடுத்தபடியாக ஆர்கா மீடியா நிறுவனம் சார்பில் நடிகர் சர்வானந்தை நாயகனாக வைத்து ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
தமிழில், எங்கேயும் எப்போதும், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை உள்பட சில படங்களில் நடித்த சர்வானந்த், தெலுங்கில் சுமார் 20 படங்களுக்கு மேல் நாயகனாக நடித்திருக்கிறார். லாவண்யா திரிபாதியுடன் இணைந்து இவர் நடித்த ராதா என்ற படம் கடந்த மே மாதம் ரிலீசானது. இந்நிலையில், பாகுபலி தயாரிப்பாளர்களின் புதிய படத்தில் நாயகனாக நடிக்க தற்போது தயாராகிக்கொண்டிருக்கிறார் சர்வானந்த். இந்த படத்தை பிரகாஷ் கோவெலம்முடி இயக்குகிறார்.