அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
குருசேகரா இயக்கத்தில் தயாராகியுள்ள படம் வளையல். இந்த படத்தின் ஆடியோ விழா நேற்று காலை சென்னையில் நடைபெற்றது. விழாவில், படக்குழுவினருடன் ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம், பாடலாசிரியர் சினேகன், லொள்ளுசபா ஜீவா உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா தொடங்கிய சிறிது நேரத்தில் வருகை புரிந்த இயக்குனர் பாரதிராஜா ஆடியோவை வெளியிட்டார். அதையடுத்து உடனடியாக அவர் அங்கிருந்து விடைபெற்றுச் சென்று விட்டார். அதன்பிறகு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் வளையல் படக்குழுவை வாழ்த்தி பேசினர்.
அப்போது ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் பேசும்போது, பாடலாசிரியர் சினேகனை கலாய்க்கத் தொடங்கினார். அதாவது, சினேகன் இந்த படத்தில் இரண்டு நல்ல பாடல்களை எழுதியிருக்கிறார். அதோடு, தனது அருகே அமர்ந்திருக்கும் ஹீரோயினிடம் ரொம்ப பாசமாக பேசிக்கொண்டிருக்கிறார். ரொம்ப பரிவாக இருக்கிறார். அதேமாதிரி படநாயகி பவ்யஸ்ரீயும் சினேகனிடம் ரொம்ப பாசமாக இருக்கிறார். பவ்யமாக இருக்கிறார். உங்க கண்ணுக்கிட்ட ஒரு முடி இருக்கு சார் எடுங்க எடுங்கன்னு அவர் சொன்னது என் காதில் விழுந்தது. மீடியாக்கள் அதை போட்டோவாக எடுத்துக்கொண்டார்கள். இதனால் சினேகன் வீட்டில் என்ன பிரச்சினை ஆகப்போகிறதோ தெரியவில்லை. அவர்களை வாழ்த்துகிறேன் என்று ஜாலியாக கலாய்த்தார்.
இதையடுத்து சினேகன் பேச வரும்போது, என் பக்கத்தில் காலியாக இருக்கை இருந்தாலே கதாநாயகிகள்தான் வந்து உட்காருகிறார்கள். அதைப்பார்த்து, அது எப்படி உங்கள் பக்கத்தில் இருக்கை காலியாக இருந்தால் அதில் கதாநாயகிகள் மட்டுமே வந்து அமருகிறார்கள் என்று கேட்கிறார்கள். அது ஏன் என்று எனக்குத் தெரியாது. காலியாக இருக்கை இருந்தால் கடைசியாக வர்றவங்க உட்காருவாங்க. அப்படித்தான் கதாநாயகிகள் வந்து அமருகிறார்கள். இதை நான் திட்டமிட்டு செய்வதில்லை. இந்த மேடையிலும் அப்படித்தான் அந்த பிள்ளையாக வந்து உட்கார்ந்தது. அதைப்பார்த்து இப்படியெல்லாம் வதந்தி பரப்பி விடுகிறார்கள். இதுவும் கடந்து போகும் அவ்வளவுதான் என்று அவரும் அதை ஜாலியாக எடுத்துக்கொண்டு பேசினார்.