மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் |
தென்னிந்தியத் திரையுலகின் இரு பெரும் சூப்பர்ஸ்டார்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி. தமிழில் ரஜினிகாந்தும், தெலுங்கில் சிரஞ்சீவியும் சுமார் 30 ஆண்டு காலத்திற்கும் மேலாக வசூல் மன்னர்களாக இருக்கிறார்கள். இருவருமே 60 வயதைத் தாண்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிரஞ்சீவி 2008ம் ஆண்டு பிரஜா ராஜ்யம் என்ற கட்சியை ஆரம்பித்தார். அதன்பின் 2011ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியுடன் தன் கட்சியை இணைத்துவிட்டார். தற்போது காங்கிரஸ் காட்சியின் ராஜ்யசபா உறுப்பினர் ஆக சிரஞ்சீவி இருக்கிறார். சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்திற்கு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல் காந்தி சென்றிருந்தார். அப்போது நடைபெற்ற கட்சி கூட்டங்கள் எதிலும் சிரஞ்சீவி கலந்து கொள்ளவில்லை. அவர் குடும்பத்துடன் சுற்றுலா சென்றதால்தான் அவர் கலந்து கொள்ளவில்லை என்று காரணம் சொல்லப்பட்டது. இருந்தாலும் கடந்த ஒன்றரை வருட காலமாகவே சிரஞ்சீவி அரசியலில் இருந்து விலகியே உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்திற்கும், தமிழ்நாட்டு அரசியலுக்கும் சுமார் 20 ஆண்டு காலத்திற்கும் மேலாகவே தொடர்பு உள்ளது. ரஜினி வாய்ஸ் என்பது 96ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் நன்றாக வேலை செய்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன்பின் ரஜினி வாய்ஸ் அவ்வப்போது வரும் போகும். ஆனால், கடந்த மாதத்திலிருந்து ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ரசிகர்களைச் சந்தித்த போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்ற ரீதியில் பேசினார். விரைவில் மீண்டும் ரசிகர்களைச் சந்திக்கும் போது தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி அவர் வெளிப்படையாகப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு சூப்பர் ஸ்டார்களான சிரஞ்சீவி, ரஜினிகாந்த் இருவரது அரசியல் நிலையும் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சிரஞ்சீவி அரசியலை விட்டே விலகலாம் என்றும், ரஜினிகாந்த் எப்போது வேண்டுமானாலும் அரசியலுக்குள் வரலாம் என்ற நிலையும் விரைவில் உருவாகலாம். தென்னிந்திய அரசியல் இனி வரும் காலங்களில் பரபரப்பாக இருக்கப் போகிறது என்பது மட்டும் தெரிகிறது.