ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் திரைப்பட பாடல் ஆசியர்களில் தஞ்சை ராமய்யாதாஸ் வித்தியாசமானவர். இசை அமைப்பாளர் மெட்டை சொல்ல சொல்ல ஆன் தி ஸ்பாட்டிலேயே பாடல் வரிகளை சொல்லக்கூடியவர். அதனால்தான் இவரை எம்.ஜி.ஆர் எக்ஸ்பிரஸ் கவிஞர் என்று அழைத்தார்.
மயக்கும் மாலை பொழுதே நீ போ..., கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்..., புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே..., பிருந்தாவனமும் நந்தகுமாரனும்..., சொக்கா போட்ட நவாபு உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். ஒருவரே கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதும் டிரண்டை உருவாக்கியவரும் தஞ்சை ராமய்யாதாஸ்தான். இவர் எழுதிய பகடை பன்னிரண்டு என்ற நாடகம்தான் பிற்காலத்தில் குலேபகாவலி என்ற திரைப்படமாக தயாரிக்கப்பட்டது.
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..., ஏச்சு பிழைக்கும தொழிலே சரிதானா எண்ணிப்பாருங்க உள்ளிட்ட பல பாடல்கள் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். தஞ்சை மாவட்டம் மடானம்பு சாவடியில் பிறந்த ராமய்யாதாஸ், ஆரம்ப பள்ளி ஆசிரியராக இருந்து பிறகு நாடக ஆசரியராகி அதன்பின்பு திரைப்படத் துறைக்கு வந்தவர். குறுகிய காலத்திலேயே அரிய சாதனைகளை படைத்து விட்டு தனது 52வது வயதில் காலமானார்.