தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பகல் நிலவு தொடரில் ஜோடியாக நடித்து வரும் அன்வரும், சமீராவும் நிஜத்திலும் காதலர்கள். தமிழ் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பே இருவரும் காதலர்கள். இருவருமே ஐதராபாத்தை சேர்ந்தவர்கள். இருவரும் இணைந்து தெலுங்கில் பல குறும்படங்களிலும், சில தொடர்களிலும் நடித்துள்ளனர். பகல்நிலவு தொடரில் முதலில் நடிக்க வந்தவர் அன்வர்தான். அதன்பிறகுதான் அவர் காதலி சமீராவையும் அழைத்து வந்தார்.
தற்போது இருவரும் இணைந்து ஒரு தொடரை தயாரிக்க இருக்கிறார்கள். ஜி மராட்டி சேனலில் ஒளிபரப்பாகி வரும் இந்தி தொடரை ரெக்க கட்டி பறக்குது மனசு என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்கிறார்கள். இதில் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. சமீரா மட்டுமே நடிக்கிறார். அன்வர் தயாரிப்பு பணிகளை மட்டுமே கவனிக்கிறார். தற்போது நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. ஜீ தமிழ் சேனலில் தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. அன்வர் சமீரா திருமணம் அடுத்த ஆண்டு நடக்க இருக்கிறது.