தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இசை அமைப்பாளர் பரணி இயக்கி, இசை அமைத்திருக்கும் படம் ஒண்டிக்கட்ட. நண்பர்களுடன் இணைந்து அவரே தயாரித்திருக்கிறார். புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் இசை அமைப்பாளர்கள் எஸ்.ஏ.ராஜ்குமார், தினா, சத்யா, அம்ரீஷ் கலந்து கொண்டனர். விழாவில் எஸ்.ஏ.ராஜ்குமார் பேசியதாவது:
இந்த படத்தின் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. தனது சொந்தப் படம் என்பதற்காக அல்ல, பரணி எப்போது இசை அமைத்தாலும் அதில் மெலடி தூக்கலாக இருக்கும். மெலடி பாடல்கள்தான் காலத்தை வென்று நிற்கும். ஆனால் இன்றைக்கு புதிய டிரண்ட் என்று சொல்கிறார்கள். இசையை பொறுத்தவரையில் டிரண்ட் என்பதே கிடையாது. இசை என்றைக்கும் இசைதான். டிரண்ட் என்று சொல்லி பாடல்களை குப்பையாக தருகிறார்கள். என் வாயில் கெட்ட வார்த்தை வருகிறது. சபை நாகரீகம் கருதி பேசவில்லை.
இவர்களாக வெறும் சத்தங்களால் ஒரு பாடலை உருவாக்கி விட்டு அதையே டிரண்ட் என்கிறார்கள். ஒரு இசை அமைப்பாளரின் திறமை மெலடி பாடல்களில்தான் தெரியும். இளையராஜா போன்றவர்கள் இப்போதும் தங்கள் தரம் குறையாமல் இசை தருவதற்கு காரணம் அவர்கள் டிரண்டை நம்புவதில்லை. இசையை நம்புகிறார்கள். இசை என்பது வெறும் சத்தங்களால் உருவாவதல்ல. கதை, கதைக்கான சூழல், இயல்பு, கதாபாத்திரங்களின் தன்மை இவற்றால் உருவாவது. இவற்றில் பணியாற்றுவதால் ஒவ்வொரு இசை அமைப்பாளருக்குள்ளும் ஒரு இயக்குனர் இருக்கிறார். பரணி அதனை இப்போது வெளிக் கொண்டு வந்திருக்கிறார் என்றார் எஸ்.ஏ.ராஜ்குமார்.