தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஜிஎஸ்டி.,-யிலிருந்து பிராந்திய மொழி படங்களை காப்பாற்றுங்கள் என நடிகர் கமல்ஹாசன், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரே வரி என்ற அடிப்பையில் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வருகிற ஜூலை 1 முதல் அமலாக இருக்கிறது. ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒவ்வொரு விதமான ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. சினிமாவை பொறுத்தமட்டில் தியேட்டர் டிக்கெட்டிற்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு திரைத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல், ஜிஎஸ்டி.,-யை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை ஜிஎஸ்டி.யில் நல்ல முடிவு எடுக்கப்படாவிட்டால் சினிமாவை விட்டே நான் ஒதுங்குவேன் என கமல் கூறியிருந்தார்.
இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு டுவிட்டர் வாயிலாக ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து கமல் தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... "ஜி.எஸ்.டி விவகாரத்தில் அழுத்தம் தருவது நோக்கமல்ல, ஜி.எஸ்.டி-யால் பிராந்திய மொழி படங்கள் அழிந்துவிடும் அபாயம் உள்ளது, அனைவரையும் காப்பாற்ற கவுன்சிலை வேண்டுகிறேன்" என்று கூறியுள்ளார்.