ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'பாகுபலி-2' படத்தின் வெற்றியை தொடர்ந்து ராஜமவுலியின் அடுத்த உருவாக்கத்திற்கான ஆர்ட் டைரக்சன் வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த வேலைகள் அவரது அடுத்த படத்திற்காக அல்ல. அவர் ஆசைப்பட்டு அமைக்க விரும்பியுள்ள பண்ணை வீட்டுக்காகத்தான். ஆம். தெலுங்கானாவில் உள்ள தோனபந்தா என்கிற கிராமத்தில் நூறு ஏக்கரில் இடம் வாங்கியுள்ள ராஜமவுலி அங்கே பண்ணை வீட்டை நிர்மாணிக்கும் பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.
இந்த பண்ணை வீடு முழுக்க முழுக்க கிராமத்தின் பின்னணியில் அமைய இருக்கிறது. இந்த பண்ணை வீட்டை வடிவமைக்கும் பணிகளை ஆர்ட் டைரக்டர் ரவீந்தர் மேற்கொண்டுள்ளார். இவர் பாகுபலி' படங்களுக்கு முன்னதாக ராஜமவுலியின் படங்களில் தொடர்ந்து ஆர்ட் டைரக்டராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்திற்கு அருகிலேயே ராஜமவுலியின் ஒன்றுவிட்ட சகோதரரரும் பிரபல இசையமைப்பாளருமான கீரவாணிக்கு சொந்தமான இடமும் இருக்கிறது. அதனால் வரும் நாட்களில் இந்த கிராமம் இவர்களால் மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்க இருக்கிறது என்பது மட்டும் உறுதி.