அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
தொடர்ந்து மாறிவரும் பருவநிலையையும், புவி வெப்பமயமாதலையும் கணக்கில் கொண்டு கேரளா முழுவதும் சுமார் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் வேலையை ஆரம்பித்துள்ளது கேரள அரசு. மேலும் இந்த திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக இதனை துவங்கி வைக்கும்படி மலையாள ஸ்டார் மோகன்லாலை கேட்டுக்கொண்டது. எப்போதும் மக்களுக்கு பயன்தரும் அரசின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் மோகன்லாலும் இதற்கு ஒப்புகொண்டார்.
தற்போது இயக்குனர் லால் ஜோஸ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துவரும் 'வெளிப்பாடிண்டே புத்தகம்' படத்தில் கல்லூரி துணை முதல்வராக நடிக்கிறார் மோகன்லால். இதன் படப்பிடிப்பு கேரளாவில் தும்பாவில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் தான் நடைபெற்று வருகிறது.. கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி முழுவதும் நிறைய மரக்கன்றுகளை நட்டுவைத்து இதன் படப்பிடிப்பை துவங்கினார்கள்.. அதன் தொடர்ச்சியாக இப்போது நாடும் முழுதும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும் அதே கல்லூரியில் மரக்கன்றுகளை நட்டு துவங்கி வைத்துள்ளார் மோகன்லால்.