ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்தியாவின் மிகச்சிறந்த எழுத்தாளர்கள், கதாசிரியர்கள் பட்டியலில் கேரளாவை சேர்ந்த அடூர் கோபாலகிருஷ்ணன் முக்கியமான இடத்தை பிடிப்பவர். மலையாள சினிமாவுக்கு பல அற்புதமான படைப்புகளை தந்திருப்பவர். 75 வயதான இவர், கடந்த வருடம் திலீப்பை வைத்து இயக்கிய 'பின்னேயும்' படம் அட்டர் பிளாப் ஆனது.
இந்தநிலையில் உலக அரங்கில் இந்திய சினிமா சரித்திரத்தையே மாற்றி எழுதிய பாகுபலி படத்தை இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கிலும் கொண்டாடிக்கொண்டு இருக்க, அடூர் கோபாலகிருஷ்ணனோ இந்தப்படத்தை ரொம்பவும் மட்டம் தட்டி விமர்சித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது, “என்னை பொறுத்தவரை 1951ல் வெளியான பாதாள பைரவி போலத்தான் இப்போது வெளியாகியுள்ள 'பாகுபலி'யும். ரெண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இந்தப்படத்தை பார்ப்பதற்காக நான் பத்து ரூபாய் கூட செலவு செய்யமாட்டேன்.” என காட்டமாக கூறியுள்ளார். அதுமட்டுமல்ல 2015ல் பாகுபலி படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றபோது தேசிய விருது கமிட்டியில் ஜூரிகளில் ஒருவராக இருந்த அடூர் கோபாலகிருஷ்ணன், “பாகுபலி'க்கு தேசிய விருது கிடைத்தால் அது அடுத்து வருபவர்களுக்கு தவறான செய்தியை சொன்னதுபோலாகிவிடும்” என்று அப்போதே விமர்சித்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.