ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இங்கிலாந்து நாட்டின் எட்க்பாஸ்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியைக் காண, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல நாட்டு வீரர்களும் வருகை தந்திருந்தனர். அதேப்போல, இந்த போட்டியை நேரில் கண்டுகளிக்க வேண்டும் என்கிற ஆவலில் வந்திருந்த நமக்கு பரிட்சயமான சினிமா பிரபலங்கள் இருவர். ஒருவர் தனுஷ்.. இன்னொருவர் பிருத்விராஜ்.. இவர்கள் இருவரும் தங்களது ஆஸ்தான வீரரான சச்சினை இந்தபோட்டியின்போது ஸ்டேடியத்தில் சந்தித்து மகிழ்ந்தனர்.
தனுஷ் தற்போது ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காணவந்த தனுஷூக்கு, மழையால் ஆட்டம் தடைபட்ட நேரத்தில் சச்சினை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதேப்போல பிருத்விராஜ் மலையாளத்தில் நடித்துவரும் 'ஆடம் ஜான்' படத்தின் படப்பிடிப்பும் லண்டனில் நடைபெற்று சமீபத்தில் தான் முடிவடைந்தது. ஊருக்கு திரும்புவதற்கு முன் இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட்டை நேரில் பார்க்க வந்த பிருத்விராஜுக்கும் சச்சினை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தனுஷ், பிருத்விராஜ் இருவருமே சச்சினை சந்தித்ததை பெருமையுடன் தங்களது வலைப்பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.