ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி |
ஜெர்மன் நாட்டிற்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் சென்றிருந்தபோது அவரை சந்தித்தார் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா. அப்போது அவர் குட்டை பாவாடை அணிந்திருந்ததோடு, பிரதமர் முன்பு கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்தார். இதையடுத்து அவருக்கு கண்டனங்கள் எழுந்தது. என்றாலும் பின்னர், தனது அம்மாவுடன் தான் அமர்ந்திருக்கும் ஒரு அறைகுறை ஆடையணிந்த போட்டோவை வெளியிட்டு நாங்கள் சாதாரணமாகவே இந்த மாதிரிதான் இருப்போம். அதனால் யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்பது போன்று ஒரு போட்டோவை வெளியிட்டிருந்தார் பிரியங்கா சோப்ரா.
இருப்பினும், அவருக்கு கண்டனங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், கவர்ச்சிப்புயல் சன்னி லியோன், பிரியங்கா சோப்ராவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், பிரியங்கா சோப்ரா அந்தமாதிரி உடையில் பிரதமரை சந்திக்க சென்றபோது யாரும் எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. பிரதமரே அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அப்படியிருக்க மற்றவர்கள் இதற்கு கண்டனம் தெரிவிப்பது சரியல்ல. மேலும், ஒருவர் எப்படிப் பட்டவர் என்பதை அவர்கள் அணியும் உடையை வைத்து மதிப்பிடாமல் அவர்களது மனதை வைத்து மதிப்பிட வேண்டும் என்றும் கூறியுள்ளார் சன்னி லியோன்.